For Quick Alerts
For Daily Alerts
Just In
கருணாநிதியின் பொங்கல் கவிதை
முதல்வர் கருணாநிதி பொங்கல் திருநாளையொட்டி வெளியிட்டுள்ள கவிதை:
தமிழர்களே, தமிழர்களே!
மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்றாரே!
பாவேந்தர் பாரதிதாசன் - அன்று
மூவேந்தர் பரம்பரை கொண்டாடிய
பொங்கலை என்றும்
தொடருகின்ற தமிழர் விழாவாகக் கொண்டாடுவோம்!
வான் முட்ட வண்ணக் கொடிகள் பறக்கட்டும்!
வாழ்த்துக்கள் முரசு கொட்டட்டும் வகை வகையாக!
தெருவெல்லாம் தோரணங்கள் -
திண்ணைகளில் கோலங்கள் -
தேன் கலந்த மழலை மொழியும்
ஊன் கலந்து உயிரோடு இணையும்
கோலமங்கைக்கு குளிர் விழியும்
காலமெல்லாம் வாழ்க தமிழ் என்று
சீலமிகு செம்மொழியைப் பாடட்டும்!
ஓலிமிடு கடல் போல் உலகெங்கும் பரவட்டும் தமிழர் புகழ்!
இதே போல பல தலைவர்களும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Monday, February 5, 2007, 16:50 [IST]