For Daily Alerts
Just In
செல்வா எங்கு சென்றாய்?
சென்னை:இலங்கை விமானப்படையால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வனுக்காக இரங்கல் தெரிவித்து முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள இரங்கற் பா.
எப்போதும் சிரித்திடும் முகம்-
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!
இளமை; இளமை; இதயமோ;
இமயத்தின் வலிமை! வலிமை!
கிழச் சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி!
உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிரனையான் -
உடன்பிறப்பனையான்;
தமிழர் வாழும் நிலமெல்லாம் அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா எங்கு சென்றாய்?
Story first published: Wednesday, December 19, 2007, 18:10 [IST]