For Daily Alerts
Just In
திசைமாறியவன்!
-கலை
அழுவது என்னவோ
அடுத்த வீட்டுக் குழந்தைதான்!
அடுத்த வீதியில் நடப்பதோ
போஸ்டருக்கு பாலாபிஷேகம்!
அடித்து விரட்டியதோ
அம்மாவைத் தான்!
அடியோனாய் கோயில்கட்டி!
ஆராதிப்பதோ நடிகையைத்தான்!
கூட்டத்தோடு கோஷமிட
கொடுப்பதுவோ 'கோட்டர்'தான்!
ஆட்டம் பாட்டமெல்லாம் அரங்கேறுமே
அன்றிரவு மட்டும்தான்!
யாரோ உயர நீ
குடைபிடிப்ப தென்ன! உலகில்
தான்வாழ உழைப்பின்
விடை மறந்ததென்ன!
நீ கட்டவுட் வைக்கும் நேரத்தில்
களப்பை பிடித்திருந்தால்
காடு செழித்திருக்கும்! நெற்
கதிர்மணி பூத்திருக்கும்!
இவன் பொன்னான நேரத்தை
வீணாக்கியவன்! வாழ்க்கை
புரியாமல் திசைமாறி
புகழ் போதிப்பவன்!
உலகம் செல்லும் பாதையில்
உனைச் செலுத்து நல்
உழைப்பொன்றே கொண்டு செல்லும்
உயர்வுக்கு!
-கலை([email protected])
Story first published: Wednesday, December 26, 2007, 12:10 [IST]