For Quick Alerts
For Daily Alerts
Just In
என் நகராப்பொழுதுகளில்...
நீயில்லாத மழையிரவுகள்
உயிரில்லாத உடல்
உருவம் பெற்ற
தென்றல் நீ
தொடுமுன்னே
உதிர்ந்த பூ நான்
நீ தவறாகவே உச்சரிக்கும்
என்பெயர்
குயில் பாடல்..
என் நட்சத்திர இரவுகளில்
நீ இருப்பதாகவும் இல்லாததாகவும்
கண்சிமிட்டுமொரு நட்சத்திரம்...
என்நகராப்பொழுதுகளில்
உன் நினைவுகள்
கவிதைகள்...
கடற்கரைமணல் வெளிகளில்
பாதச்சுவடுகள் ஒன்றின்மேலொன்றாய்
நம் சுவடுகள்
காதலின் சின்னம்...
நீயும் நானுமாய்
அலைகள்
சிற்றலையும் அதை
தொடரும் பேறலையுமாய்..
-ரிஷி சேது ([email protected])
Comments
Story first published: Wednesday, December 19, 2007, 18:10 [IST]