For Daily Alerts
Just In
சாராலாய்த் தொடங்கும் போதே...
-ரிஷி சேது
எப்போதும் சொல்வதற்கென
ஏதொவொன்றை
விட்டுப் போகிறது
மழை நாள்- அவரவற்கு
சாராலாய்த் தொடங்கும் போதே
ஆரம்பித்துவிடும்- அதன் குரல்கள்
பள்ளிக்குப் போன மகள்
குடையெடுத்துப் போகாத ஆதங்கம்
அம்மாக்களுக்கு
மகள் நனைந்து திரும்புகிறாள்- தன்
மழையனுபவம் சொல்ல
சிட்டுக் குருவிகள்
அங்கேயிங்கே பறந்து
சொல்லத் துடிக்கிறது
தன்னனுபவம் பற்றி
திண்ணை விட்டகலா
அப்பா சொல்வதெல்லாம்
நிஜமென்றால்-
மழை, தேவர்களின்
பெரு மூத்திரம்
நான் நினைக்கும் முன்பே
தெருவிறங்கி நனையும்
என் மனது
ஒண்ட இடமில்லாமல்
தவிக்கும் தெரு நாயாய்...
- ரிஷி சேது ([email protected])
Story first published: Wednesday, December 19, 2007, 18:09 [IST]