For Daily Alerts
Just In
நீரோட்டம்
- சேக் அப்துல்லாஹ்
நேற்று
என் தாத்தா - ஆற்றில்
வெள்ளம் கண்டார்.
என் தந்தை - ஆற்றில்
ஓடும் நீரைக் கண்டார்.
இன்று நானோ!
விரும்பியும் விரும்பாமலும்
விட்டுவைக்கப்பட்ட
நீர் நிலைகளில் - அரசாங்கத்தால்
அமைக்கப்பட்ட குழாயிலும்
ஆழ்துளை கிணற்றிலும்
நீரைக் காண்கின்றேன்.
நாளை!
என் பிள்ளை
ஆற்றிலா! குளத்திலா! - இல்லை
ஆழ்துளை கிணற்றிலா!
எங்கு? எப்படி? எதில்?
காண்பானோ நீரினை!
- சேக் அப்துல்லாஹ்([email protected])
Comments
Story first published: Thursday, February 7, 2008, 18:26 [IST]