For Quick Alerts
For Daily Alerts
Just In
'சேது'வான சாது
- குடந்தை பாஷா
காலேஜ் வாசலிலே
கால் கடுக்க நின்றதும்
டீனேஜ் வயசிலே
காதலிக்க தொடங்கியதும்
தினம் தினம் கண்ணே
உன் வரும் வழி நோக்கி
மனம் படும் பெண்ணே
தடங் தடங் ஒலி போக்கி
திடமாய் நிற்க என்
கால்களை வலுப்படுத்தி
அடிக்கொரு தரம்
சட்டைக்காலரை சரிப்படுத்தி
தென்றலாகி நீ
வரும்போது ஒரு வாசம்
நாற்றாய் நான்
வளைவதோ ஒரு நேசம்
கொடுத்தேன் இன்று
உன் கையில் அக்கடிதம்
வாங்கிய பின்
வசந்தமாய் நீ போக
பதில் தெரியாமல்
உன் பின்னே நான் பார்க்க
செதில் செதிலாய் நீ
கிழித்து போட்டது கடிதமல்ல
அதில் என் காதலும்
கிழித்து என் இதயமும் கிழிய
கிழிந்த என் இதயவழி
இறங்கி நீ போவதெங்கேடி
வழிந்த அசடு வழி
எங்கோ நான் வெறிக்க
உனக்காக தினம்
வாடி நின்ற நான்
இன்று ஏர்வாடியில்
சாதுவாக இருந்த
நான் சேதுவாக.
- குடந்தை பாஷா([email protected])
Comments
Story first published: Monday, February 11, 2008, 10:42 [IST]