கர்நாடக ராகத்தில் திருக்குறள்!
கர்நாடக ராகத்தில் திருக்குறள்!
சர்வதேச தமிழ் மையத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற 2வது தமிழ் மாநாட்டில், 1,330 பள்ளி மாணவ, மாணவியர் இணைந்து, திருக்குறளின் 1,330 குறள்களையும் கர்நாடக ராகத்தில் பாடினர்.
இந்த சர்வதேச தமிழ் மையத்தின் இந்தியப் பிரிவு தலைவராக, பிரபல கர்நாடக இசைக் கலைஞருமான சுதா ரகுநாதன் உள்ளார்.
சென்னை நகரைச் சேர்ந்த 7 பள்ளிகளைச் சேர்ந்த 7வது முதல் 10வது வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்கள் 1,330 பேர் இதில் கலந்து கொண்டு திருக்குறளை கர்நாடக இசையில் பாடினர்.
திருக்குறளின் 10 அதிகாரங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சில குறள்களை தேர்வு செய்து, பத்து விதமான ராகங்களில் மாணவ, மாணவியர் பாடினர்.
இதுதொடர்பாக விளக்க சிடியை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி அதை வைத்து மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் பயிற்சி தந்தார்களாம். கடந்த ஒரு மாதமாக இதற்கான ரிகர்சல் நடந்தாம்.
திருக்குறளை முதல் முறையாக பெரிய அளவில் கூடி கர்நாடக இசையில் பாடியது இதுவே முதல் முறையாகும்.
திருக்குறள் பாடுவது தவிர இசை, நடனம் மற்றும் இலக்கிய சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன.
தமிழகத்தில் தமிழ், தமிழ் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது குறித்த தலைப்பில் கருத்துப் பட்டறையும் நடந்தது. கலாச்சார நிழ்ச்சியும் நடைபெற்றது.