For Quick Alerts
For Daily Alerts
Just In
காதலே ...என் காதலே...
1. தீர்க்கமாய் மறுக்கிறாய் நீ
தாபமாய் தவிக்கறது மனது...
2. நீ சொல்லாமலே இருந்துவிடு
நீ என்னைக்காதலிக்கிறாய் என்ற
நினைப்பிலேயே இருந்துவிடுகிறேன்
நீ சொல்லாமலே இரு....
3. ஆம் அல்லது இல்லை
என்பதை விட-உன்
மெளனம் அழகாய் சொல்கிறது
உன் காதலை.....
4. வானம் நீர் தெளிக்க
காகங்கள் பூபாளமிசைக்க
நீ கோலமிட்டுக்கொண்டிருந்தாய்-
என் கவிதை காட்சியாக்கப்பட்டது....
5. நீ சொல்லாவிட்டாலும்
ஊர் சொல்லும் நம் காதலை....
6. என் கனவுக்குள் நீ
உன் கண்களுக்குள் நான்
நம் நடுவே காதல்
யாருக்கும் புலப்படாமல்-
பூவுக்குள் நுழையும் காற்றுபோல்.....
7. காற்று இசையமைக்க
பறவைகள் பாட்டிசைக்க
மென்தூரலில் நாம் மரமொதுங்க...
வானவில் பார்த்திருந்த அம் மாலையில்
நீ காதலைச்சொன்னாய்
உலகம் நிசப்தமானது.......
- ரிஷிசேது([email protected])
Comments
Story first published: Tuesday, February 12, 2008, 12:11 [IST]