For Daily Alerts
Just In
வரன்...
வாடிக்கையாய் நடக்கிறது வீட்டில்...
வரன் ஒன்று வந்திருக்கிறது...
விவரம் சொல்கிறேன் கேள்...
விஞ்ஞானி, பொறியாளர், மருத்துவர், வழக்கறிஞர்...
வடநாடு அல்லது அயல்நாடு...
நல்ல குணம், குடும்பம், படிப்பு...
என்ன சொல்கிறாய்...?
நேரம் கொடுங்கள்...
யோசிக்கிறேன்...
பின் மெளனம்...
மெளனம்...
மெளனம்...
சம்மதத்திற்கு அறிகுறி அல்ல...
பிடிக்கவில்லை என்பதற்கு...
காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்...
இப்படியாய்...
எப்போது சம்மதிப்பேன்...
என காத்துக் கொண்டிருக்கிறார்கள்...
என்றும் இல்லை...
என்பது என் மனதிற்குத் தெரியும்...
ஏன்....?
என்று உங்களுக்கு புரியுமே...
- அனாமிகா பிரித்திமா ([email protected])
Comments
Story first published: Tuesday, March 18, 2008, 17:21 [IST]