For Daily Alerts
Just In
என் பாக்கியம்...
கண்கள் முன் உங்களை...
வைத்திருக்கிறேன்...
ஒரு நொடி கூட முட மனதில்லை...
நீங்கள் மறையக்கூடாதே !...
நாசியில் இழுக்கிறேன் சுவாசம்...
நீங்கள் இருக்கும்...
இதயத்திற்கு...
இரத்த ஓட்டம் வேண்டுமே !...
செயற்கை புன்னகையை ...
ஒட்டி கொண்டு சிரிக்கிறேன்...
தங்கள் சிந்தனையால் சிரிக்க...
உதடுகள் மறுக்கிறதே !...
விரல்கள் உணவை எடுக்க மறக்கிறது !
வாய் அதை ஏற்க மறுக்கிறது !
என் நாவு ருசி இழந்து...
வருடங்கள் ஆனது !
உயிர் (நிங்கள்) இல்லா உடம்பு...
இருந்து என்ன பயன்?...
உங்கள் மடியில் உயிர் பிரியும்...
பாக்கியம் இல்லை...
உங்கள் கையிலாவது...
அது போகட்டுமே ...
அனு அனுவாய் சாவதை விட...
என்னை முழுதாய்...
கொன்றுவிடுங்களேன்...
அது என்...
பாக்கியமாக இருக்கட்டுமே...
என் பாக்கியம் ...
பாக்கியம் ...
-அனாமிகா பிரித்திமா ([email protected])
Comments
Story first published: Saturday, September 27, 2008, 14:36 [IST]