For Quick Alerts
For Daily Alerts
Just In
வேற்றுமையில் ஒற்றுமை
-அனுக்ரஹா
கூந்தலின் கருமையின்
வெறுமை,
மல்லிகையாய்ப் பூக்கும்
வெள்ளை நட்சத்திரங்களால்
கவிதையானது.
குழந்தையின் வெள்ளைக் கன்னம்,
கரும் பொட்டின் அழகால்
சிரித்தது.
ஓவியம் உயிர் பெற்றது,
வண்ணங்களின்
சங்கமிப்பால்.
பல இடங்களிலும்
மாண்ட நீர்த்துளிகள்தாம்
ஓர் இடத்தில்
மழையாய்ப்
பிறக்கின்றன.
வெவ்வேறு உயர
விரல்களின் ஒற்றுமை,
வலிவான கைகள்
படைக்கின்றன.
கோபுரச் சிற்பங்களில்,
பல்வேறு கைகளின்
தனித்துவம்
தெரிவதில்லை
ஒரு துளி,
ஒரு வண்ணத்தை
ஏழாகக் கிழித்தாலும்,
வேற்றுமையின் ஒற்றுமையில்தான்
வானவில்லின்
அழகு ஒளிர்கிறது.
நம்பிக்கை, மனிதர்களை
மதங்களாகப் பிரித்த தருணம்,
உலகம்,
வண்ண வில்லாக வளைந்தது
-அனுக்ரஹா ([email protected])
Comments