For Daily Alerts
Just In
சிட்டுக்குருவியின் தொட்டில்...
என் வீட்டிற்குள் வந்தது…
பட்டுப்போன்ற சிறகும்
வாலை ஆட்டும் அழகும்
மனதை கொள்ளை கொண்டது…
இடம் தேடி திரிந்த பறவைக்கு
என் அலமாரியில்
ஒரு வீடமைத்தேன்…
உணவாய் நெல் மணிகளும்
தாகம் தீர தண்ணீரும்
கொட்டாங்குச்சியில் வைத்தேன்….
தனியாய் வசித்த பறவை
ஒருநாள் துணையுடன் வந்தது
தன் குடும்பத்தை பல்கிப் பெருக்கியது….
தனியாய் இருந்த எனக்கும்
குருவியைப் போலொரு
குடும்பம் வந்தது…
எனக்கும் மட்டுமல்ல
இப்பொழுது
என் குழந்தைகளுக்கும்
குருவியின் குடும்பமே
உறவாகிப் போனது.
Comments
English summary
I saw a little bird go hop, So I said to the bird, won't you stop. And was going to the window, to say how do you do, When he shook his little tail, and far away he flew.
Story first published: Saturday, June 18, 2011, 12:35 [IST]