அக்கினி சிறகில் உயர பறந்த குழந்தை அவர்.. அப்துல் கலாம் பிறந்தநாளுக்கு வாசகரின் உருக்கமான கவிதை!
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு வாசகர் ஒருவர் உருக்கமான கவிதை எழுதியுள்ளார்.
சென்னை: முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு வாசகர் ஒருவர் உருக்கமான கவிதை எழுதியுள்ளார்.
முன்னாள் குடியரசுத்தலைவரும், விஞ்ஞானியுமான தமிழகத்தை சேர்ந்த அப்துல் கலாமிற்கு இன்று பிறந்த நாள். இன்றோடு அவருக்கு 87 வயது ஆகிறது.
இதனால் இந்தியா முழுக்க பலர் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். இதைமுன்னிட்டு வாசகர் ஒருவர் அவரது பிறந்த நாளுக்காக கீழ்க்கண்ட உருக்கமான கவிதையை எழுதி உள்ளார்.
தமிழகத்தின்
கடைக்கோடி
என்பது ராமேஸ்வரம் !
அங்கு பிறந்த
கடைக்குட்டி நீதானே
தமிழகத்தின் நல்வரம் !!
உன் மரம் வளர் கவிதை
எனக்கு மிக விருப்பம் !.. ..
நின் கருத்துகள் ஆழ படித்தால்
இளைஞரெல்லாம் ஆவாரே
சிறந்த அறிவில் கர்ப்பம் !!.....
உன் அக்கினி சிறகுகள்
உயரபறந்து புகழில் சிறந்தது !
ஆனாலும் என்னவோ-உன்
மனமும் முகமும் குழந்தையாய்
மாறி அல்லவா சிரித்தது !!
வீணையோடு சேர்ந்து
விண்வெளியினை மீட்டினாய் !
பாரதமும் சிறப்பென்று பாருக்கு- ஏவு
கணையோடல்லவா காட்டினாய் !!
இந்திய மகுடத்தில் நீயொரு
ஜொலிக்கும் ரத்தினமாம் ! உனை
இதயத்தில் நினைக்கிறோம்
உன் பிறந்த நாளான இத்தினமாம் !!
உன் பெரும்புகழ் என்பது ஏவுகணை !
எப்படி மறப்போம் நாங்கள்
தமிழருக்கு பெருமை தந்த உனை !!...
பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா..
- கவிஅன்பு.துள