For Daily Alerts
Just In
வாழ்க்கை தத்துவம் ரமலான்
சென்னை: ரமலானை முன்னிட்டு ஒன்இந்தியா வாசகர் அஹ்மது தௌஃபீக் ஜித்தாவில் இருந்து கவிதை எழுதி அனுப்பியுள்ளார்.
உண்ணா நோன்பை முப்பது நாட்கள்
ஐம்பெருங் கடமை இஸ்லாம் வகுத்து
அண்ணல் பெருமான் அழகுற அமைத்து
நன்னயம் பெறத்தான் நமக்குத் தந்தனர்!
ஐம்புலன் அடக்கி ஆளும் சக்தி
ஈந்து உவக்கும் உன்னத மாண்பு
பசியின் மகிமை ஏழைகள் வாழ்க்கை
விதிமுறை உணர்தல் நோன்பின் நோக்கம்!
இனத்தால் மனத்தால் நிறத்தால் மொழியால்
இணைந்து சங்கமம்
தந்திடும் ரமலான்
நோன்பில் தொழுகை
ஈகை பக்குவம்
மாத முடிவில்
ரம்ஜான் பெருநாள்!
Comments
English summary
A reader of Oneindia who is residing in Saudi Arabia has sent us a poem about Ramadan.
Story first published: Thursday, June 14, 2018, 15:38 [IST]