For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாய்மை!

Google Oneindia Tamil News

வயிற்றில் பூத்த மலரைத் தொடாமலே வாடிடுவாள்..
வளரும் பிள்ளையை எண்ணி வாய் ருசியும் பூட்டிடுவாள்..
பத்து மாதங்களில் கனியும் கனிக்காக கனவுகள் கண்டிடுவாள்..
சொத்து எதையும் விரும்பாமல் பிள்ளைக்காக உயிர் வாழ்வாள்..
கண்களில் உறக்கம் மறந்து காணாத கருவிற்காக
கண்களை திறந்துகொண்டு பெற்றெடுத்துவிட்ட கனவினில் உலாவருவாள்...

Hail the motherhood

முக்கனியும் கசக்குமென்று பிள்ளைக்கனியின் இனிமையை காட்டிடுவாள்...
ராகங்கள் எதுவும் இனிதில்லையென்று பிள்ளை பேசும் முதல் மொழியினை கண்டிடுவாள்...
இசையொலியும் இனிமையில்லையென்று பிள்ளை சொல்லும் அம்மா என்ற சொல்லழகை ரசித்திடுவாள்..
எந்நேரமும் தன்னிலை மறந்து தூங்கிடாமல் பிள்ளையின் சிறு அசைவொலி கேட்டதும் எழுந்திடுவாள்...
பிள்ளையின் அழுகை கண்டு பதறிடுவாள்..
புன் சிரிப்பைக் கண்டு மெய்மறப்பாள்...
தன் வலி... தன் பசி... தன் விருப்பம்... தன் சுகம்.... சுயங்கள் பல சிந்தியாமல்...
பிள்ளையின் பசி... அதன் விருப்பம்... அதன் சுகம்... என்றே வாழ்ந்திடுவாள்..
வாழ்நாளிலே ஒரே ஒருமுறை மட்டுமே பிள்ளை அழுவதை தன் வலியையும் மீறி ரசித்து சிரித்திடுவாள்...
அது.. தான் பெற்றெடுக்கும் தருணத்தில் மட்டுமே!
போற்றுவோம் தாய்மையை!

- சுஜாதா ஜெயராமன்

English summary
This is a poem from our reader Sujatha Jayaraman on the eve of Mothers day today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X