எதிர் நீச்சல் போடும் என் குல பெண்களே!
சென்னை: இன்று சர்வதேச மகளிர் தினம். ஒவ்வொரு பெண்ணும் சக்தி.. ஒவ்வொரு பெண்ணும் இயக்கம். நீரின்றி அமையாது உலகு என்பார்கள். அதுபோலத்தான் பெண்கள் இல்லாவிட்டால் மனித குலத்தின் இயக்கமும் நின்று போகும்.
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டிய சிறப்புக் கவிதை:
சிற்பியின் உளி செதுக்காத
சிலையின் ஒளி பெண்
தன் கைத்திறனில் கலை வடிவம் தருபவள் பெண்
விழிகளில் நிலைத்திடும் கம்பீரம்
இவள் பார்வையில் வெளிப்படும்
கோபத்திலும் குணம் இருக்கும்
கடைக்கண்ணும் சிவந்து அழகாகும்
மனதில் வேதனை ஆயிரம்.. ஆனால்
உதட்டில் புன்னகை பூரணம்
தான் இருக்கும் இடத்தை சிறப்பிப்பிப்பது இவள் சிறப்பு
அதிகார பொறுப்பிலும்
பொறுப்புகள் களை கட்டும்
குடும்ப தலைவியாகவும்
திறமை கொடி பறக்கும்
தலைவனின் குணம் அறிந்து
மனம் புரிந்து கை கோர்க்கையில்
தன்னிலை மயங்குவான்.. தாய்மையில் உறங்குவான்
பெண்மையின் தாய்மையில்
மழலையின் மனமும் மயங்கும்
சுமைகளை சுகமாக்கும் திறன்
பெண்ணின் ஸ்வாரஸ்ய குணம்
எதிர்பார்ப்புகளை குறைத்தும்
எதிர்வினைகளை எதிர்த்தும்
எதிர் நீச்சல் போடும்
என் குல பெண்களுக்கு
இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!
- கலை