ஆளுமையை அழகாய் சொன்ன தென்ன அம்மா!
ஜெயலலிதா மரணமடைந்த ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தொண்டர்கள் கண்ணீர் கவிதை எழுதியுள்ளனர்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கவிதாஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
வீரத் திருமகள் வீழ்ந்தாள்
என நினைத்தாயோ?
வீறுக்கொண்டு வந்திடுவார்
விண்ணுக்கு சென்றது கூட
வெளிச்சம் கொண்டு வந்திடவே
மண்ணுக்குள் சென்றாலும்
மனதை விட்டு அகற்றுவது இயலுமோ?
அள்ளிக் கொடுத்தவரே
அகத்தில் கொள்ளி வைத்ததென்ன
சொல்லி ஆறவில்லை
சோகம் தீர போவதில்லை
அன்னையிழந்த குழந்தையென
அகிலமும் அனாதை ஆனதென்ன
அழுகையும் ஊற்றாய் போனதென்ன
ஆறாத வடுவாய் ஆனதென்ன?
அஞ்சாமை கற்றுத் தந்ததென்ன
ஆளுமையை அழகாய் சொன்னதென்ன
வீழும் வரை சாதித்து இருந்தாய்
வீழ்ந்தாலும் வீரமாய் இருந்து விட்டாய்
நீ ராணி மங்கம்மாவாய் இருந்தாயோ?
ஜான்சி ராணியாய் இருந்தாயோ?
உள்ளுக்குள் எதை சொல்லாமல் சென்றாயோ?
துளிர்த்து வந்து சொல்லி விடு
அம்மா என்ற வார்த்தையில்
உங்கள் நினைவே வந்திடுமே
காத்திருக்கிறோம் கனவுகளோடு
சில நாட்கள்
மீண்டும் உங்கள் ஆன்மா பிறக்கட்டும்
மீளாத என் மக்களை மீட்டிடட்டும்
சிவமணி
வத்தலக்குண்டு