For Daily Alerts
Just In
அஃறிணைகள்!
-கவிஞர் மகுடேஸ்வரன்
தாம் பிறந்து
வளர்ந்த கானகத்தில்
வாழ்வதைத்தான் அறியும்
அஃறிணைகள்.
அவற்றின் கால்களில்
கண்ணுக்குப் புலப்படாத
வேர்கள் முளைத்திருக்கும்.
பழகிய
காட்டு மண்ணை
இறுகப் பற்றியிருக்கும்.
இன்னொரு நிலத்தைத்
தான் வாழ எடுத்துக்கொள்ளும்
சிறுமையற்றவை அவை.
இடம்பெயர்ந்தால் மகிழ்கின்ற
இனமல்ல.
உயர்திணையிடம்
அஃறிணைகள் துன்புறவேண்டும் என்று
திணை வகுக்கவில்லை
நாம்.
பல்லுயிர் ஓம்புதலைப்
பாட்டன் கூறிச் சென்றானே,
நினைவிருக்கிறதா ?
Comments
English summary
Poet Magudeswaran's poetry on the recent death of an elephant at Madhukkarai.
Story first published: Thursday, June 23, 2016, 11:16 [IST]