For Daily Alerts
Just In
கையிலே தடியிருந்தும்..!
மகாத்மா,
கையிலே தடியிருந்தும்
அஹிம்சை
ஊன்றி வீர நடை போட்டவன்!
வெள்ளையர்களையே
வெள்ளைக்கொடி
காட்ட வைத்து
வெற்ற
வாகை சூடியவன்!
கண்ணில் அணிந்த
கண்ணாடியை
கால கண்ணாடியாக்கி
இந்தியாவை
சரித்திரம் படைக்க வைத்தவன் !
உப்பு காற்று
வீச வைத்து ,
வெள்ளையர்களை
இதயம் வியர்க்க வைத்தவன்!
வேள்விகள்
பல செய்து,
சத்திய சோதனைகள் செய்து,
அரிச்சந்திரனுக்கு
அடையாளமானவன்!
நாணயமாய்
வாழ்ந்ததால் தான் ,
நாணயங்களின்
நாயகனாகி உலகையே
விலை பேசுகிறான்!
தேசத்தை சேயாக்கி
கொண்டதனால் தான் ,
தன்னையே
தேசதந்தையாக்கி கொண்டாட வைத்தான்!
ஆத்மாவை
ஆராதனை செய்து,
ஆனந்த தேசம் தந்து ,
மகாத்மாவாக உதித்தெழுந்தவனே !
உலகம் உள்ள வரை
ஜீவாத்மாக்கள்
உன்னை வாழ்த்தி கொண்டாடுவோம்!
- இரா.சங்கர் அபுதாபி
Comments
English summary
Mahathma Gandhis' 150th birth day is being celebrated today.
Story first published: Wednesday, October 2, 2019, 10:55 [IST]