அன்னையின் அன்பு
உயிர் கொடுத்து உள்ளத்தில் சுமப்பது
அன்னையின் அன்பு
உதிரம் ஊட்டி நம்முடல் வளர்ப்பது
அன்னையின் அன்பு
எந்த சொல்லிலும் விளக்க இயலாதது
அன்னையின் அன்பு
ஆழ்ந்த பக்தியும், தியாகமும் கலந்தது
அன்னையின் அன்பு
எல்லை இல்லாத சுயநலம் அற்றது
அன்னையின் அன்பு
எதனாலும் யாராலும் அழிக்க முடியாதது
அன்னையின் அன்பு
எவர் இருந்தாலும் போனாலும் நிலைப்பது
அன்னையின் அன்பு
எதிர்பார்ப்பு இன்றி கட்டி அணைப்பது
அன்னையின் அன்பு
எங்கு சென்றாலும் நிழலாய் தொடர்வது
அன்னையின் அன்பு
எல்லாத் தவறும் பொறுத்து காப்பது
அன்னையின் அன்பு
எதையும் வெல்லும் சக்தி கொடுப்பது
அன்னையின் அன்பு
அண்டமே எதிர்த்தாலும் உடன் நிற்பது
அன்னையின் அன்பு
நலிவுறும் போது நம்பிக்கை அளிப்பது
அன்னையின் அன்பு
வலியுறும் போது கண்ணீர் துடைப்பது
அன்னையின் அன்பு
உள்ளம் உடைந்தாலும் குற்றம் கூறாதது
அன்னையின் அன்பு
உள்ளது எல்லாம் அள்ளி அளிப்பது
அன்னையின் அன்பு
உறவு அனைத்திலும் உன்னதம் என்பது
அன்னையின் அன்பு
உயிர் கொடுத்தேனும் நம்மை மீட்பது
அன்னையின் அன்பு
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
-புவனா கருணாகரன்