For Daily Alerts
Just In
தினம் வைத்து கொண்டாடப்பட வேண்டியவரா அம்மா?
அம்மா..
இது மூன்றெழுத்து மந்திரம்....
தன்னலமறியா ஜீவன்..
அகிலத்தை... மூர்ச்சையாகாமல் காக்கும் கவசம்...
உழைப்பில்... கடிகாரத்தை மிஞ்சியவர்...
அன்பின் ... அட்சயப் பாத்திரம்...
கருணையில்... வான்மழை...
அம்மா... தினம் வைத்து கொண்டாடப்பட வேண்டியவரா நீங்கள்? இல்லை... இல்லை தினந்தோறும் ...
கொண்டாடப்பட வேண்டியவர்...
நீரோ... வாழ்க்கையை சொல்லிக் கொடுத்தீர்...
நானோ ... தங்களுக்கு வாழ்த்துகளை சொல்லித் திரிகின்றேன்...
ஆனால் தங்களுக்கு தேவை வாழ்த்துகள் அல்ல... தினந்தோறும் நாலு வார்த்தை என்பதையும் அறிவேனம்மா..
உன் பெயரோ 'சின்னத்தாய்'...
ஆனால் நீ ஆக்கினாய்.. என் கஷ்டங்களை, துயரங்களை..சின்னதாய்....
- இராம.சக்திவேல்
மதுரை
Comments
English summary
A special poem from our reader Rama sakthivel on Mother's day.
Story first published: Sunday, May 10, 2020, 12:44 [IST]