For Daily Alerts
Just In
அஃறிணைகள் உலகில் சட்டமுமில்லை திட்டமுமில்லை!
- கவிஞர் மகுடேசுவரன்
அஃறிணைகளை நீங்கள்
வேட்டையாடலாம்
பிடிக்கலாம்
அடிக்கலாம்
உதைக்கலாம்
கட்டி வைக்கலாம்
அடைத்து வைக்கலாம்
வளர்க்கலாம்
கொல்லலாம் தின்னலாம்
பட்டினி போடலாம்
தீனி போடலாம்
பழக்கப்படுத்தலாம்
பயன்படுத்திக்கொள்ளலாம்
வித்தை கற்றுக் கொடுக்கலாம்
சொற்கள் சொல்லிக் கொடுக்கலாம்
வாழிடங்களைக்
கைப்பற்றிக்கொள்ளலாம்
வந்தால் துரத்தலாம்
வாங்கலாம் விற்கலாம்
இலாடம் கட்டலாம்
சேணம் பூட்டலாம்
மூக்கணாங்கயிறு போடலாம்
விரையடிக்கலாம்
இனச்சேர்க்கை மறுக்கலாம்
பிறவுயிர்கள்மீது கொண்டுள்ள
பேரன்பினால்தான்
அவை துன்பங்களை
ஏற்றுக்கொள்கின்றன.
ஆனால் அவற்றின் உலகுக்கும்
நீங்களே அரசன் என்று
நினைத்துக்கொள்கிறீர்கள் பாருங்கள்...
அங்கேதான்
தவறிழைக்கிறீர்கள்.
அஃறிணைகளின் உலகில்
அரசனுமில்லை நாடுமில்லை
சட்டமுமில்லை திட்டமுமில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக
அஃறிணைகளை
மனிதன் ஆளவே முடியாது.
Comments
English summary
'No laws or plans in animal's world', a poetry by Poet Magudeswaran on animal's world.
Story first published: Saturday, May 27, 2017, 10:34 [IST]