For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்!

கருணாநிதிக்கு அபுதாபியிலிருந்து வாசகர் ஒருவர் கவிதை எழுதியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த கருணாநிதிக்கு நாடு கடந்தும் தீவிர தொண்டர்கள் என்றுமே உண்டு.

அதன்படி அபிதாபியிலிருந்து கருணாநிதிக்காக கண்ணீர் கவிதையை நமது ஒன் இந்தியா வாசகர் ஒருவர் எழுதி அனுப்பியுள்ளார். அந்த வாசகரின் பெயர் ஆசைத்தம்பி. கருணாநிதியின் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் தன் வருத்தத்தை கவிதை வடிவில் அவர் தந்துள்ளார். அந்த கவிதை இதோ:

One India Reader write the poem to Karunanidhi

அழைத்துச் சென்றார்கள்
அய்யாவும், அண்ணாவும் - அவர்தம்
அடியொற்றிய தம்பியை !
அங்கேயும் நடக்கிறதோ
"சமூக நீதி" பொதுக்கூட்டம் !
அவர் இருவர் கரம் பற்றி
நடந்திட்டார் நம் கலைஞர் !
அப்படி நடக்குமெனில்
எப்படியும் அழைத்திடுவார் நம் தலைவர் !
"உடன்பிறப்பே"
ஓடி வா என ஏங்கும்
ஒரு கோடி தொண்டர் கூட்டம்
உனக்குண்டு மீண்டும்
உன் பேனா எழுதுமெனில்,
எமை விட்டு சென்றாயே எம் தலைவா !
செல்வது உன் எண்ணம்
என்றும் அவர் இருவர் பின் தானே !
வாழும் உன் புகழ் என்றும்,
இமையாக நீ காத்த
எம் தமிழ் மொழி போல் !
வாழ்க புகழ் ! வான் புகழ் கொண்ட
நம் கலைஞர் புகழ் !

ஆசைத்தம்பி, அபுதாபி
இவ்வாறு அந்த கவிதையை வாசகர் அனுப்பியுள்ளார்.

English summary
One India Reader write the poem to Karunanidhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X