"வெள்ளைப் பூக்கள் எங்குமே.. பார்க்கும் கண்கள் பொங்குமே.." ஆளை மயக்குது அமெரிக்கா!
வாஷிங்டன்: அமெரிக்காவின் பல பகுதிகளையும், கடும் குளிர் வாட்டி வருகிறது. பார்க்கும் இடங்களில் எல்லாம் பனி மழை பெய்து வருகிறது. இது தாங்க முடியாத குளிர்தான். ஆனால், அதையும் ரசித்து பார்த்தால், ரம்யமாகத்தான் தெரிகிறது.
இப்படித்தான்,அமெரிக்காவின் ப்ளூமிங்டன், பகுதியில் வசிக்கும், நமது 'ஒன்இந்தியா தமிழ்' வாசகரான அய்யனார் சின்னராஜும், அந்த பனி மழையை, ரசித்து, அது பற்றி ஒரு கவிதை எழுதி நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார் செய்துள்ளார்.
அவரோடு சேர்ந்து, நாமும் அமெரிக்க வானிலையை ரசிக்கலாம்:
வெள்ளைப் பூக்கள் எங்குமே, பார்க்கும் கண்கள் பொங்குமே
புத்தம் புது ஆண்டிது
இயற்கை சேரந்து வாழ்த்து
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இன்பம் பொங்க வாழ்த்துக்கள்(2)
வெள்ளைப் பூக்களே
வெள்ளைப் பூக்களே
ஒரு துளியாய் பனித்துளியாய்
எங்கும் சிதறலாய்
எங்கும் பரவலாய்
இன்பமே கொள்ளை இன்பமே
அள்ளுதே அழகாய்க் கொல்லுதே
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இன்பம் பொங்க வாழ்த்துக்கள்
யாதுமிங்கே ஒரு நிறம்
காணும் கண்ணில் பரவசம்
நீட்சமே அழகின் உச்சமே
ஆயிரம் கண்கள் பருகிடும் உன்னை
நிழற்ப் படமாய் நிலைப் படமாய்
அழியா நிலைப் படமாய்
வெள்ளைப் பூக்கள் எங்குமே.......
இவ்வாறு ரசித்து எழுதியுள்ளார் நமது வாசகர், அய்யனார் சின்னராஜ்.