For Daily Alerts
Just In
அளவுகோலால் அடி வாங்கி.. ஆறாத வடு ஒன்று.. மறக்க முடியாத 7B!
சென்னை: கோவில்பட்டியைச் சேர்ந்த நமது வாசகர் கோகுலச்செல்வன். தா நமக்கு எழுதி அனுப்பியுள்ள ஆசிரியர் தின சிறப்புக் கவிதை:
7 "B" ன் அனுபவம்
கொஞ்சம் எட்டிப்பார்த்தது
மனதினிலே!
வ.உ. சி. அரசு பள்ளியிலே
ஆங்கில வகுப்பில்
அறிவியல் புத்தகத்தில்
அழகான படம் பார்த்து
அளவு கோலால் அடி வாங்கி
ஆறாத வடு ஒன்று
ஆள் காட்டி விரலில் உண்டு!
அடிக்கடி அந்த ஆசிரியை
நினைவூட்டும்
அடியை அல்ல அவர் என்
அறிவை விரிவு செய்ய
ஆற்றிய பணிகளை
எம் மகள் இருவருக்கும்
எடுத்து இயம்பும் போது
ஏற்பட்ட ஆனந்ததிட்கு
அளவுகோல் இல்லை!
English summary
Oneindia Tamil reader GokulaSelvan's Poem on his teachers.