For Daily Alerts
Just In
வினாக்குறிகளை வைத்தே எழுதிய கவிதை.. பெரியார்!
பெரியார்
வினாக்குறிகளை வைத்தே
எழுதிய விளக்கமான
கவிதை
இந்தக்
கரும்பலகை மட்டும்தான்
கேள்விகளை கற்றுத்தந்தது
சுயசிந்தனையால்-புதிய
பதில்களை பெற்றுத்தந்தது
பதில் சொல்லக்கூட
பழகாதவர்களுக்கு
கேள்வி கேட்க
கற்றுத் தந்தவன்
மூட நம்பிக்கைக்கு
முடிவுரை எழுத நினைத்த
முன்னுரை
நீ பெரியார் என்று தெரியும்
எப்படி தந்தையானாய் ?
இன்று வரை
தமிழக பிள்ளைகளுக்கு
சாதிக் குறியீடின்றி
பெயர் சூட்டுகிறாயே
நீ தந்தை பெரியார்தான்
முதுமையையும்
மூத்திரச் சட்டியையும்
ஒருங்கே சுமந்து
நீ முழங்கியதை
மறந்திடலாகுமோ?
அன்று நீ
கையில் தாரெடுத்ததால்தான்
இன்று தமிழ்த் தேசியம்
பேசமுடிகிறது
பகுத்தறிவு பகலவா
இன்றும் பலர் அறியாமலேதான்
இருக்கிறார்கள்
நீ ஆண்டவனை எதிர்க்கவில்லை
ஆதிக்கத்தைத்தான்
எதிர்த்தாயென்பதை
- க.தங்கமணி, சிங்கப்பூர்
Comments
English summary
Our reader G Thangamani has written a poem on Periyar on his 139th birth day.