For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாயே உனக்கு இணை நீயே...!

Google Oneindia Tamil News

சென்னை: தாய்மை குறித்த ஒரு கவிதை. !

சுமையாக வந்தேன்
சுகமாக சுமந்தாய்

எட்டி உதைக்கும் தருணத்திலும்
தட்டி கொடுத்து ரசித்தாய்

Poem on Motherhood

உன் வளையல் ஓசை
நான் முதலில் கேட்கும் ஒலி

பத்திய உணவென்று தெரிந்தும்
பத்து மாதம் பொறுத்திருந்தாய்

உயிர் தனை கொடுத்து
மறுபிறவி எடுத்தாய்

உன் தொப்புள் கொடி பந்தம்
அதுவே என் முதல் சொந்தம்

உலகத்தில் உள்ள அனைத்து செல்வமும்
உன் கையில் கிடைத்தது போல்
பொக்கிஷமாய் பூரித்தாய்

உயிரே போகும் வலிகள் பல கொடுத்தும்
உற்சாகமாய் மார்போடு கட்டி தழுவி
ஆனந்த கண்ணீர் ஊற்றாயிற்று

அழுதே சாதித்தேன்
அழகாய் பேணி காத்தாய்

அன்பாக அனைத்து
அறிவாய் வளர்த்தாய்

ஆயிரம் உறவுகள் பெற்றாலும்
தாயே உனக்கு இணை நீயே

என்னை சுமந்த உன்னை
ஒரு நொடியேனும் சுமக்கும் வாய்ப்பு கிடைக்குமாயின்
அதுவே என் வாழ்வின் வரமாகும்

- கலை

English summary
A Poem on Motherhood by our reader Kalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X