For Quick Alerts
For Daily Alerts
Just In
பதவி படுத்தும் பாடு!
கை கூப்பி நின்னீங்க
கலகலன்னு சிரிச்சீங்க
சேறு படிஞ்ச முகத்தை கூட
சேர்த்து நின்னு புகைப்படம்
எடுத்தீங்க
வயலு வரப்புனு
வரிசை கட்டி
சென்றீங்க
செடி கொடி பாக்காம
மேடு பள்ளம் தெரியாம
காத்து தூசி அறியாம
ஏழை ஜனங்க
வீடு வாசல் பார்த்து
ஓடிஓடி
தேடி தேடி
அடுக்கடுக்கா
வாக்குறுதி
அள்ளி
வீசி
ஒட்டு
கேட்டு போனீங்க
நாங்க பாவப்பட்ட
மனுஷங்க
சூதுவாது தெரியாது
உள்குத்து புரியாது
கள்ளம் கபடம்
அறியாம
முழு மனசா
நம்பித்தானே
உங்களுக்கு
ஒட்டு போட்டோம்
இன்றும் நாங்க
அதே வெட்ட வெளியில்
கட்டாந்தரையில்
கால் கடுக்க
சின்னசின்ன
விஷயத்துக்கும்
கவலையோடு
காத்து கிடக்கின்றோம்
நீங்க
ஆடம்பரமா வாழுங்க
வீடு வாசல்
சொத்து பத்து சேருங்க
ஆனால்
இனியும் ஒருக்காலும்
எங்களை
முழுசா
ஏமாத்த மட்டும்
நினைக்காதீங்க
நாங்க
பட்டது போதும் !!!
- கூத்தாநல்லூர் கு.செ.அமீர் ஹம்ஸா (துபாய்)
Comments
English summary
A poem on politicians, sent by our Dubai based reader Koothanallur Ameer Hamsa.
Story first published: Tuesday, March 14, 2017, 15:31 [IST]