For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக சுற்றுசூழல் தினம்.. கருப்பை வரை குடைந்து கட்டிடங்களாக்கினோம் !

Google Oneindia Tamil News

மரம், செடி ,
கொடிகளெல்லாம்
பூமியின் சுகப்பிரசவதால்
பிறந்தவை

நாம்
அவளின் கருப்பைவரை குடைந்து
கட்டிடங்களாக்கினோம் !

"நீரின்றி அமையாது உன் உலகு".. மீண்டும் என்னை தேடி வருவாய்!

Poem on World Environment Day

விதைத்தால் மரமாகும்,
பிளாஸ்டிக்கை புதைத்தால்
மண்ணும் மலடாகும் !

இலைகள் சருகானதால்
உரமானது .
இன்று
ரசாயனமே உரமானதால்
உணவே விஷமானது .

நிறமில்லா
நீருக்கும்
சாயமேற்றினோம் !

சிட்டுக்குருவியின்
சிறகுகள் கொடுத்து
செல்போன் சிக்னல் வாங்கினோம் !

கவிதை எழுதக்கூட
காகிதம் தேடாதீர்
எங்கோ
ஓர் மரம்
உயிர்வாழட்டும்
நம் சந்ததிக்காக .

மனிதா
சுற்றுசூழலை
நாம் காக்காவிடில் ,
பூமியும்
பொறுமை இழக்கும்
தானே தொடங்கும்
பணியை
தன்னை ''மறுசுழற்சி செய்வதற்காக ''..

--கோ. சௌந்தி

English summary
A Poem on World Environment Day by our reader Sounder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X