For Daily Alerts
Just In
உலக சுற்றுசூழல் தினம்.. கருப்பை வரை குடைந்து கட்டிடங்களாக்கினோம் !
மரம், செடி ,
கொடிகளெல்லாம்
பூமியின் சுகப்பிரசவதால்
பிறந்தவை
நாம்
அவளின் கருப்பைவரை குடைந்து
கட்டிடங்களாக்கினோம் !
"நீரின்றி அமையாது உன் உலகு".. மீண்டும் என்னை தேடி வருவாய்!
விதைத்தால் மரமாகும்,
பிளாஸ்டிக்கை புதைத்தால்
மண்ணும் மலடாகும் !
இலைகள் சருகானதால்
உரமானது .
இன்று
ரசாயனமே உரமானதால்
உணவே விஷமானது .
நிறமில்லா
நீருக்கும்
சாயமேற்றினோம் !
சிட்டுக்குருவியின்
சிறகுகள் கொடுத்து
செல்போன் சிக்னல் வாங்கினோம் !
கவிதை எழுதக்கூட
காகிதம் தேடாதீர்
எங்கோ
ஓர் மரம்
உயிர்வாழட்டும்
நம் சந்ததிக்காக .
மனிதா
சுற்றுசூழலை
நாம் காக்காவிடில் ,
பூமியும்
பொறுமை இழக்கும்
தானே தொடங்கும்
பணியை
தன்னை ''மறுசுழற்சி செய்வதற்காக ''..
--கோ. சௌந்தி
Comments
English summary
A Poem on World Environment Day by our reader Sounder.
Story first published: Friday, June 5, 2020, 19:39 [IST]