For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குளிர் பரவும் தேகத்தில்.. முட்டிக் கொண்டு நிற்கிறது உன் முத்தத் துளிகள் #மழை

Google Oneindia Tamil News

சென்னை: இதோ இன்னும் சில மழைத்துளிகள்.. கவி வரிகளில் நமது வாசகர்களிடமிருந்து...

மழை - உனக்காக ஒரு கவிதை

இயற்கையின் வரம் நீ!
எனக்கு உணவளித்த உழவாழியின் உயிர் நீ!
என் வார்த்தைகளைவிட உனக்காக உன் துளியினால் செழித்த மரங்களின் மென்மையான காற்று சொல்லும் உன் குரலை பற்றி!
உன்னால் நனைந்த ரோஜாக்கள் சொல்லும் உன் அழகை பற்றி!
வழிந்தோடும் ஆறுகள் சொல்லும் உன் நளினத்தய் பற்றி!
காணக்கிடைக்கா வயழ்ஹல் சொல்லும் உன் உயர்வை பற்றி!
என் ஊரின் அருவிகள் சொல்லும் உன் பாசத்தை பற்றி!
இதை தவிர நான் ௭ன்ன சொல்ல ஒன்றை தவிர
மழை நீரை சேமிப்போம் இயற்கையை மதிப்போம்!!!

Rain poems from the readers

- அகமது நஸிர்

--

இடைவெளி இல்லாமல்
அடித்துப்பெய்யும்
பெருமழையின் சாரலில்
நீ தலைதுவட்டிய துளிகள் கலந்திருக்கலாம்

குளிர் பரவும் தேகத்தில்
நரம்புகளின் முடிவில்
முட்டிக்கொண்டு நிற்பது
உன் முத்தங்களாக இருக்கலாம்

குடையற்ற மழையில்
துணையற்ற நடையில்
நிழலும் நனையும் நொடியில்
உரசிக்கொள்ளும் கைகளில் மிதப்பது
உன் கைபற்றிய கதகதப்பாய் தோணலாம்

வீடடைந்த கணமொன்றில்
காத்துக்கிடக்கும் தனிமைக்குள்
மோதி உடையத் துடிக்கும் மெளனத்தை ஏந்திக்கொள்ள
நீ இல்லாமலும் போகலாம்..!

- தனபால் பவானி

[என்ன மக்களே.. செமையா மழை பெய்யுது.. ஏதாவது எழுதுங்களேன்.. ஜில்லுன்னு?? ]

English summary
Rain poems from the readers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X