For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொட்டின் வாசத்தை போல சுகமான காலம்!

Google Oneindia Tamil News

- யாழினி வளன்

சுமை தூக்கி கழுதைகளாய் புத்தகம் சுமந்தாலும்
இதயம் கவலையின் சுமை அறிந்ததில்லை

ஏழுமலையானை விட என் நண்பன் தான்
எனக்கு பெரிது என நினைத்த காலம்

ஐயர் வீட்டு பருப்பு சாதமும் பாய் வீட்டு பிரியாணியும்
சேர்த்து சுவை பார்த்த நாக்கு

Reader's poem

கணிதத்தில் நூறு கிடைக்காமல் 99 வாங்கியதற்கு
ஒரு ராத்திரி முழுவதும் அழுது வீங்கிய கண்கள்

ஒன்றாம் ரேங்கை தவற விட்டு
ரெண்டாம் ரேங்க் வாங்கின போது
மலை உச்சியில் இருந்து கீழே
விழுந்ததைபோல நொறுங்கிய நாட்கள்

மனதுக்கு பிடித்த டீச்சரை
தேவதையாய் பார்த்து
பிடிக்காத பாடத்தையும்
விரும்பிய விந்தையான நாட்கள்

பருவத்தின் பரிபாஷைகள்
புரிந்தும் புரியாமல்
மயக்கம் கொண்ட மனதை அடக்க
முடியாமல் தவித்த பதினாறின் காலம்

நான் பெரிய ஆளு
என்னால் எல்லாம் முடியும் என
அடங்கா குதிரையின் ராஜாவைப்
போல வலம் வந்த காலம் அது

மொத்தத்தில் மலரும் முன் வாசம்
அத்தனையும் தனக்குள் ஒளித்து
வைத்திருக்கும் மொட்டின் வாசத்தை போல
சுகமான காலம் பள்ளி காலம்

English summary
Our reader Yazhini Valan's poem on school days and the memories of the student hood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X