For Daily Alerts
Just In
நீ.. நான்.. நாம்!
நான் வாசித்து
உருகி கரையும்
அத்தனை கவிதைகளின்
வரிகளிலும் வந்துபோகும்
"நீ" என்ற அந்த ஒற்றை சொல்
நிச்சயமாய் நினைவுபடுத்தி
செல்வது உன்னை மட்டுமே...!
நான் வாசித்து
உருகி கரையும்
அத்தனை கவிதைகளின்
வரிகளிலும் வந்துபோகும்
"நான்" என்ற அந்த ஒற்றை சொல்லில்
அழுது தீர்க்கிறது
என் ஆசைகளும்
என் ஆற்றாமைகளும் ...!
நான் வாசித்து
உருகி கரையும்
அத்தனை கவிதைகளின்
வரிகளிலும் வந்துபோகும்
"நாம்" என்ற அந்த ஒற்றை சொல்லில்
ஒரு வாழ்க்கையை உன்னோடு
ஒருமுறை வாழ்ந்து பார்த்து
மடிகிறது என் கனவுகள் ...!
- யாழினி வளன்
Comments
English summary
Here is a poem from our US based reader Yazhini Valan on Love .
Story first published: Thursday, September 14, 2017, 16:32 [IST]