For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேன் நிலவைக் காணவில்லை #ValentinesDay

Google Oneindia Tamil News

சென்னை: காதல் என்றாலே வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். மனங்களின் கலப்பு பலருக்கு சரியாக அமையும். சிலருக்கு தோல்வியில் முடியும். எதுவாக இருந்தாலும் மனதார ஏற்பதே காதலுக்கு அழகு. கைவசப்படாமல் போவதால் அது காதல் இல்லை என்றாகி விடாது. காதல் கொண்ட மனது கடைசி வரை அந்த காதலை விட்டு அகலாமல்தான் இருக்கும், இருக்க வேண்டும். காதலைக் கொண்டாட வெற்றி மட்டும் தேவையில்லை, தோல்வியிலும் கூட காதலைக் கொண்டாட வேண்டும். காரணம், தோற்பது காதலர்களாக இருக்குமே தவிர.. காதல் என்றுமே தோற்பதில்லை.

Readers poem on lovers day

நமது மதுரை வாசகர் இராம. சக்திவேல் எழுதிய ஒரு கவிதை.

என் உயிர் காதலியே...
நின் மதி காணாமல்
நிம்மதி என்னுள் இல்லாமல்..
என் மதி கலஙகுதல்
நின் மதி அறியுமோ...
நின் இன்முகம் வேண்டி இனியும் உலவும் என் இன்முகம் உனக்கின்றி வேறு எவர்க்கு?

தேன் நிலவைக் காணவில்லை
தேய்ந்தெங்கோ மறைந்ததம்மா...
தேய்கின்ற நிலவு தான் என்றும்
முழு நிலவாய் வளர்ந்து வரும்..
வான் கூடிப் பிரிகின்ற மேகம்
மீண்டும் எழில் வண்ணக் கோலமிடும்..

இதயத்தில் கலந்த நின் நினைவு என்றும் என் உதிரத்தில் கலந்திருக்கும்...
கண்ணெதிரே மறைந்தாலும்..
மனதோடு பரிமாறும் நின் எண்ணங்கள்..
மரித்தாலும் மாறாத உயிர் வண்ணங்கள்....

இராம .சக்திவேல்
மதுரை

English summary
Our reader Rama Sakthivel has sent a poem on Valentines' day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X