For Quick Alerts
For Daily Alerts
Just In
தூரம் மிச்சமிருக்கிறது .. கடந்ததும் ... கடப்பதுமாய் !
- ரிஷி சேது
தூரம் மிச்சமிருக்கிறது
கடந்ததும் ...
கடப்பதுமாய்
கடைசிப்பறவையும்
பறந்தபின்...
மரம் தன் இலைகளை
அசைத்தது ...
கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்கு
புரிந்த தாலாட்டு
நியூட்டனை
பொய்பித்து மேல்சுவற்றில்
ஊரும் பல்லி
வேகமாய் தப்பிக்கும்
சிறு பூச்சி
செங்குத்தாய் நகர்கிறது
பயமும் பசியுமாய் ...
கொதிக்கும் வெயிலில்
உருகும் தார்சாலையில்
நகரும் சினை பாம்பிற்கு
காத்திருந்த நொடியில்
உனதழைப்பு
தவறவிட்டேன் -அழைப்பையும்
காட்சியையும்.
Comments
English summary
Rishi Sethu poem
Story first published: Tuesday, December 8, 2020, 14:15 [IST]