தீரனே, பெரிய பாண்டியனே! நீ மண்ணில் சரியவில்லை: திருநாவுக்கரசு ஐபிஎஸ் புகழஞ்சலி
சென்னை: ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை பாராட்டி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் ஆர். திருநாவுக்கரசு ஐபிஎஸ்.
நகைக் கொள்ளையனை பிடிக்க ராஜஸ்தான் சென்ற இடத்தில் சென்னை இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார். தீரன் பட பாணியில் நடந்த இந்த சம்பவம் தமிழக மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஐபிஎஸ் அதிகாரி ஆர். திருநாவுக்கரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறயிருப்பதாவது,
தன்னிகரில்லா
தமிழக காவல்துறையின்
வீரத்தினை
ராஜஸ்தான் மண்ணில் விதைத்திட்டட
தீரனே!
பெரிய பாண்டியனே!
குற்றமெனில்
எமனையும் விடாது
தமிழக காவல்துறை
என்பதை
பாகிஸ்தான் எல்லை வரை துரத்திச் சென்றாய்
நகைக் கொள்ளையன்
உன் உயிர்க் கொள்ளை
செய்யத்தான்
காலன்(எமன்) என்னும் ஊரில்
பதுங்கியிருந்தானோ!
வீரக் காக்கிச்சட்டைக்கு
புகழ்மாலை தந்த
பெரிய பாண்டியனே!
நீ மண்ணில் சரியவில்லை
வீரத்தில் விண்ணெங்கும் விரிந்துவிட்டாய்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.