For Quick Alerts
For Daily Alerts
Just In
Valentines day: என்னில் விழுந்தேன்.. உன்னில் எழுந்தேன்!
சென்னை: மலர்ந்த பூக்களின் சுகந்தமாய் மனதில் வீசிக் கொண்டிருக்கும் காதல் எப்போதுமே சுகமானது.. உணர்வதிலும், உணர வைப்பதிலும்.
உணர்வுப் பூக்களாய் நம்மை உயிர்ப்பித்து வரும் காதலின் ஒரு உயிர்த் துளி இது...!
விழியின் விழியாய்
மௌனமே மொழியாய்
உனக்குள் உணர்வாய்
உயிரில் கலந்தேன்
என்னில் விழுந்தேன்
உன்னில் எழுந்தேன்
உனக்காய் உயிர்த்தேன்
உன்னையே தொழுதேன்
கண்ணின் கருவிழியில்
விழிகளுக்கு விருந்தானாய்
என் சுவாச காற்றாய்
என்னுள் சுவாசித்தாய்
உன்னால் எனையே மறந்தேன்
எனையே வியந்தேன்
காதலே
மண்ணில் மடிந்தாலும்
உன்னில் வாழ்வேன்.
- கலை
Comments
English summary
A beautiful Valentines day special poem by our reader Kalai.