For Quick Alerts
For Daily Alerts
Just In
கும்மியடி பெண்ணே கும்மியடி... வாசகரின் ஓர் கவிதை
சென்னை: உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் பெண்மையைப் போற்றும் விதமாக நமது ஒன்இந்தியாதமிழ் இணைய தள வாசகர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
இதோ, அந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு:
இரண்டெழுத்து சொர்க்கம்... பெண்!
கும்மியடி பெண்ணே கும்மியடி
நலம் காணும் நேரம் அல்ல
களம் காணும் நேரம்
கனா காலங்கள் கலைந்தெழுந்து
கால் பதிக்கும் காலம்
இதுவென அறிந்து துயில் எழு
தூக்கத்தை துரத்துவிடு
துக்கத்தை தொலைத்துவிடு - நீ
இலக்கை எட்டியபோதும்
ஓய்ந்துவிடாதே - வீழ்ந்து
கிடக்கும் பெண்ணுக்கும் - நீ
ஊக்கம் கொடு - அவர்களுக்கு
அது உறுதி கொடுக்கும் - மன
உறுதி கொடுக்கும்
வீறுகொண்ட வீரப்பெண்ணாக
விரைந்து வா ... விரைந்து வா
வாழ்த்துகிறேன் இம்
மகளிர் தினத்தில்
- ஜோஷி ஆலென்
Comments
English summary
Women's Day Celebration :The Poem of the Reader