சித்திரை மாத ராசி பலன் (14-04-2015 to 14-05-2015)
சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும்.
சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது.
சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக் கிழமைகளில் பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சித்ரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும்.
சித்திரை மாதத்தில் பிறப்பவர்கள் கல்வி அறிவு உடையவர்களாகவும், நல்ல செயல் செய்பவர்களாகவும், சுவையான உணவு மீது நாட்டம் கொண்டவராகவும் இருப்பார்கள் என்றும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெற்றவர்கள் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட சித்திரை மாத ராசிபலன் பற்றி அறிந்து கொள்வோம்
கிரகங்களின் ராசி மாற்றம்
சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - 20ம் தேதி ரிஷபம் ராசிக்கு மாறுகிறார்.
புதன் - 14ம் தேதி ரிஷபம் ராசிக்கு மாறுகிறார்.
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 19ம் தேதி மிதுனம் ராசிக்கு மாறுகிறார்.
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு-கேது - ராசி மாற்றம் இல்லை
மேஷம்:
உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் அரசாங்க வகைகளில் சிக்கல் உருவாகும் எலும்பு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்க்கு உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம். மனதில் கோபம் அதிகரிக்கும் சமூக விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
20ம் தேதிக்குப் பிறகு குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும். 14ம் தேதிக்குப் பிறகு கல்வியில் மேன்மை உண்டாகும் கமிஷன் வியாபாரம் சிறந்து விளங்கும். குழந்தைகளின் கல்வி மந்தமாகும் வங்கி கையிருப்பு குறையும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள் பொன்நகைகள் சேர்க்கை உண்டாகும்.
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சோம்பல்தனம் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களுக்கு கண்டம் உண்டாகும். வெளியூர் வெளிநாடு செல்லும் நிலை உண்டாகும். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள்.
காலபைரவரை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
ரிஷபம்:
அப்பாவுக்காக மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். அரசாங்க வகையில் அபராதம் செலுத்தும் நிலை உருவாகும். சகோதரர்களால் செலவுகள் அதிகரிக்கும். சகோதரர்களை விட்டு பிரியும் நிலை உருவாகும். படிப்பில் மந்தநிலை மாறும் நிலை உருவாகும் 14ம் தேதிக்குப் பிறகு படிப்பில் கவனம் தேவை.
தாய்மாமனுடன் நெருக்கம் உண்டாகும். வீண் அலைச்சல் அதிகரிக்கும் பணம் கையிருப்பு குறையும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும் பெண்களால் யோகம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.
மனதில் ஏதோ ஒரு பாரம் அழுத்திக் கொண்டிருக்கும். குழந்தைகளால் மனக்கஷ்டம் உண்டாகும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
ஐயப்பனை வழிபட்டு வாழ்க்கையில் வளம் பெறலாம்.
மிதுனம்:
பெரும்பாலான கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால் நல்ல பலன்களே நடைபெறும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். புதிதாக நிலம் வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். அண்ணன் தம்பி உறவு நிலை மிகவும் சிறப்படையும், சகோதரர்களால் சகலவிதமான நன்மைகளும் உண்டாகும்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும். கமிஷன் வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும். பண வரவு அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும்.
குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். பணியாளர்களின் வேலைத்திறன் மேம்படும். அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் உருவாகும் எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்.
லட்சுமிஹயக்கிரீவரை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
கடகம்:
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உதவி பரிபூரணமாக கிட்டும். பதவி உயர்வு தேடி வரும் வெளியூருக்கும் மாற்றலாகும். படிப்பில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை. பூர்வீக சொத்தில் வில்லங்கம் உண்டாகும்.
பரம்பரை சொத்து சம்பந்தமான பத்திரங்களை கவனமாக வைத்துக் கொள்ளவும். பண வரவு செலவுகளில் கவனம் தேவை. புத்தி தடுமாறும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். பக்கத்து வீட்டுக்காரர்களால் தொல்லை உண்டாகும்.
மின் சாதனங்களைக் கையாளும் பொழுது கவனமாக இருக்கவும். வரவுக்கும் செலவுக்கும் பற்றாகுறையாக இருக்கும். மனைவி மக்களுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிவபெருமானை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
சிம்மம்:
அலைச்சல் அதிகரிக்கும் சுகபோகம் குறையும். பெண்களால் தொல்லை உருவாகும். பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. தந்தை மகனுக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் விஷயங்களில் கவனம் தேவை.
நெருப்பு காயங்கள் உண்டாகும். கூர்மையான ஆயுதங்களைக் கையாளும்பொழுது கவனம் தேவை. வியாபாரம் மேன்மையடையும் மாமன்மார்களின் உதவி கிடைக்கும்.
குழந்தைகளுக்காக செலவு அதிகரிக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்பட வேண்டிய காலம். ஆன்மீகப் பயணம் உண்டாகும்.
லட்சுமிநரசிம்மரை வணங்கி வாழ்க்கையில் கவனம் தேவை.
கன்னி:
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவும். பணியாளர்கள் நன்கு வேலை செய்வார்கள். லாபம் அதிகரிக்கும். பண வரவு மற்றும் கையிருப்பு அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
விலை உயர்ந்த ஆடை அலங்கார ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை உடல் அசதி அதிகமாக இருக்கும். அரசு ஊழியர்கள் மேல் அதிகாரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் கவனம் தேவை. வாகன விபத்துகளுக்கு வாய்ப்புகள் அதிகம்.
14ம் தேதிக்குப் பிறகு தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். இல்லறத் துணையினாலும் குழந்தைகளாலும் மகிழ்ச்சி உண்டாகும். 19ம் தேதிக்குப் பிறகு பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சிவபெருமானை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
துலாம்:
குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். குதற்க்கமான பேச்சை தவிர்க்கவும். 20ம் தேதி வரை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எல்லோரிடமிருந்தும் தனித்து இருப்பதாக உணர்வீர்கள். தொழிலில் இருந்து வந்த மந்த நிலை மாறும்.
பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். உங்கள் உடல் நலத்திலும் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்திலும் கவனம் தேவை.
அப்பாவுக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு உண்டாகும். 14ம் தேதிக்குப் பிறகு படிப்பில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வியாபாரம் விருத்தியாகும். மாமன் உதவி கிடைக்கும். அம்பாளை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
விருச்சிகம்:
தன வரவு அதிகரிக்கும். கையிருப்பு மற்றும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இருந்து வந்த தடை நீங்கி விரும்பிய வகையில் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். 19ம் தேதிக்குப் பிறகு கணவன் மனைவியிடையே இருந்து வந்த சச்சரவு நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
வயதில் பெரியவர்கள் கூறும் ஆலோசனை எல்லாவற்றிலும் வெற்றிபெற உதவியாக இருக்கும். 14ம் தேதிக்குப் பிறகு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த செய்தி வந்து சேரும். தகவல் தொடர்பிலும் கமிஷன் வியாபாரத்திலும் இருந்து வந்த தேக்க நிலை மாறி விடும். உடல் ஆரோக்கியம் சீராகும். புத்தி கூர்மையடையும். குழந்தைகளின் படிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும்.
வேல்முருகனை வணங்கி வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.
தனுசு:
எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும். கையில் பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து மூலம் வருமானம் வரும். 20ம் தேதிக்குப் பிறகு அண்ணன் தம்பிகளின் உதவி பூரணமாக கிடைக்கும்.
19ம் தேதிக்குப் பின்னர் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். நிலம் வீடு வகைகளில் பிரச்சினை உருவாகும். தொழிலில் புதிய திருப்பம் உண்டாகும். 14ம் தேதிக்குப் பிறகு வியாபாரத்தில் சூடுபிறக்கும். ஷேர் மார்க்கெட் கமிஷன் வியாபாரம் சிறப்படையும்.
கோதண்ட ராமரை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
மகரம்:
மனநிலை சாந்தமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். அப்பாவுக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பு குறைவு. வாகனங்களைக் கையாளும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் செலுத்தும் நிலை உண்டாகும். தொழில் உத்தியோகம் சிறப்படையும்.
லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரத்துடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.
19ம் தேதி வரை பொழுதுபோக்கு உல்லாசப் பயணம் சிறப்பாக இருக்கும். விருந்தினர் வீட்டுக்கு வருகை அதிகரிக்கும். 19ம் தேதிக்குப் பின்னர் பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். 14ம் தேதி வரை குழந்தைகளின் கல்வி நிலையில் கவனம் அதிகரிக்கும்.
தானியங்கள் வகை வியாபாரம் சிறப்பாக இருக்கும்குடும்பத்தில் கணவன் மனைவி பிரச்சினை உண்டாக வாய்ப்புகள் அதிகம். தொல்லைகள் அதிகரிக்கும்.
அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
கும்பம்:
குழந்தைகள் படிப்புக்காக செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிற்சிறு சச்சரவுகள் உண்டாகும். கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. தொழில் உத்தியோகம் சிறப்பாக இருக்கும். 14ம் தேதிக்குப் பிறகு புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 20ம் தேதி வரை இயந்திர வகை தொழில் சிறப்பாக இருக்கும்.
அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வு உண்டாகும். போக்குவரத்தில் கவனம் தேவை. எதிர் பாராத தகவல்கள் வந்து சேரும். அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். வரவு செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சுமுகமான உறவு நீடிக்கும். லட்சுமிநாராயணனை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
மீனம்:
மனதில் கோபம் எரிச்சல் அதிகரிக்கும். கடுமையான பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. பேச்சில் தான் என்ற அகங்காரம் வெளிப்படும். பிறரது வெறுப்புக்கு ஆளாக நேரிடும். 14ம் தேதிக்குப் பிறகு படிப்பில் மந்தநிலை காணப்படும்.
வியாபாரமும் சுமாராகும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிற்கு மிகவும் சந்தோஷத்தைத் தரும். நகை நட்டுகள் விலை உயர்ந்த துணி வகைகள் புடவைகள் சேர்க்கை அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். 20ம் தேதிக்குப் பின்னர் புதிய நிலம் வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். எல்லோரையும் அனுசரித்து செல்வது நல்லது.
மகாலட்சுமியை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.