பிரகாஷமான வாழ்க்கை வேண்டுமா சூரியனை வழிபடுங்க - கண் கோளாறு நீக்கும் ஆதித்ய ஹோமம்
சூரியனை வழிபடும் விதமாக, சூரிய ஹோமம் செய்வதன் மூலம், கண்பார்வை தோஷங்கள் விலகும், பிரகாசமான வாழ்கை அமையும், அரசாங்க சம்பந்தமாக உள்ள தடைகள் விலகும், உயர்பதவி கிடைக்கும், ராஜாவை போல வலம் வரலாம்,
வேலூர்: நவக்கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரியன், நம் வாழ்க்கையின் ஆதாரமாக விளங்குகிறார். புனிதமான ஆன்மாவை குறிப்பதால் இவரை ஆன்மகாரகர் என போற்றப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில், தான் அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து, அவரது விதியை நிர்ணயிப்பது சூரியனே ஆகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சூரிய பகவானைக் குறித்துச் செய்யப்படும் ஹோம வழிபாடு, ஆதித்ய ஹோமம் ஆகும்.
வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் பல்லாயிர கணக்கான மக்கள் முன்னிலையில் ஆயிரம் தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கம் நிகழ்ச்சியுடன் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று இன்று மக்களால் அக்ஷயபுரியாகவும், சௌபாக்யபுரியாகவும், மஹோத்ஸவபுரியாகவும் மஹோத்ஸவ க்ஷேத்ரமாகவும், ஔஷதகிரியாகவும் அழைத்து மகிழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக மக்களின் நலன் கருதியும், அனைவரும் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தத்துடன் வாழவும் ஆதித்ய ஹோமம் (சூரிய சாந்தி ஹோமம்) நடைபெறுகிறது.
Rasi Palan Today: இன்றைய ராசிபலன்
இந்த ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம், சூரிய பகவானின் ஆசிகளைப் பெற்று பயனடைய முடியும். பிற கிரகங்களின் ஆற்றலையும் பெருமளவு, நமக்கு சாதகமாக்கி கொள்ள முடியும். உலகிற்கு, ஒளி மற்றும் உயிர் கொடுக்கும் ஆற்றலாக திகழும் சூரிய பகவான், அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார்.
சூரியனை வழிபடும் விதமாக, சூரிய ஹோமம் செய்வதன் மூலம், கண்பார்வை தோஷங்கள் விலகும், பிரகாசமான வாழ்கை அமையும், அரசாங்க சம்பந்தமாக உள்ள தடைகள் விலகும், உயர்பதவி கிடைக்கும், ராஜாவை போல வலம் வரலாம், வாழ்க்கையில் உங்களை வாட்டும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வெல்லவும், சிக்கல்களுக்கு தீர்வு காணவும் வழி பிறக்கிறது. எனவே, சூரிய ஹோமத்தை உங்கள் வெற்றிக்கான படிக்கட்டு எனலாம்.
மிகவும் சக்தி வாய்ந்த சூரிய பகவானை ஆராதிக்கும் வகையில் செய்யப்படும் ஆதித்ய ஹோமத்தின் மூலம், பல நன்மைகளை பெறலாம். இதில் பங்கு கொண்டு, வாழ்க்கையில் சூரியனின் அருள் பெற்று உங்கள் நலனை பலவகையிலும் மேம்படுத்தி கொள்ளுங்கள்.
இந்த ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம், உங்கள் கர்ம வினைகள் அகலும், கண்பார்வை கோளறுகள் அகலும், ஆற்றல் கிடைத்து வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும், பொருளாதார சிக்கல்கள் அகலும், உங்கள் கனவுகள் நிஜமாக்கி, வளமான வாழ்க்கை வாழலாம், உங்கள் நிர்வாகத்திறனை மேம்படுத்தும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203