மார்கழி மாதத்தில் திருப்பாவை கேட்டு கண் விழிக்கும் திருப்பதி ஏழுமலையான்
மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட வைணவ தளங்களில் சுப்ரபாதத்திற்கு பதிலாக அதிகாலைப் பாடலாகவும் மூலவரை நித்திரையில் இருந்து எழுப்பிடவும் திருப்பாவை, திருவெம்பாவை ப
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் பிரபல இசையரசி எம்.எஸ்.சுப்பலட்சுமியின் பாடப்பட்ட சுப்ரபாதம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தைமாதம் தொடங்கி கார்த்திகை மாதம் வரை 11 மாதங்கள் சுப்ரபாதம் ஒலிபரப்பிய பின்னர் மார்கழி மாதத்தில் 30 நாட்களும் திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள் ஒலிபரப்படுகிறது.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை மார்கழி முதல் நாள் தொடங்கி அடுத்த முப்பது நாட்களும் ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட ஸ்ரீரங்கநாதர் கோயில் ஸ்ரீராமர் கோயில்களில் திருப்பாவை அதிகாலைப் பாடலாக ஒலிபரப்பப்படுகிறது.
12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் அதிகாலை 3 மணிக்கு பாடப்பட்டு ஏழுமலையானை எழுப்புவார்கள். இந்த திருப்பாவையை கேட்டுத்தான் ஏழுமலையான் இனி கண்விழிப்பார்.
திருப்பாவை சேவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படுகிறது. மார்கழி மாதம் நிறைவு பெறும் வரை அதாவது ஜனவரி 14ஆம் தேதிவரை திருப்பாவை சேவை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தை மாதம் பிறந்ததும் ஜனவரி 15ஆம் தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடக்கும்.
தினந்தோறும் ஏகாந்த சேவையின் போது சீனிவாச மூர்த்திக்கு பூஜைகள் செய்யக்கூடிய நிலையில் மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கும் ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்பட உள்ளது.