For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: வெளிநாடு செல்லும் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு இருக்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சொந்த ஊரை விட்டு கடல் கடந்து வெளிநாடு செல்ல வேண்டும் என்று பலருக்கும் விருப்பம் இருக்கும். கிரகங்களின் சஞ்சாரம், தசாபுத்தியின் அடிப்படையிலேயே மேற்படிப்பு யோகமும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். பிறக்கப்போகும் 2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும் என்றும் படிப்பிற்காக விமானம், கப்பலில் செல்லும் யோகம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

வெளிநாடு செல்லும் யோகத்தினை தீா்மானிக்கும் கிரகங்கள் சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 மற்றும் 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும். சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர். ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமாக கோள்கள். இவைகள் மட்டுமின்றி 9ஆம் அதிபதி, 12ஆம் அதிபதிகளின் நிலைமையை பொருத்தும் வெளிநாடு பயணம் அமைகிறது.

2019ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனி ஒன்பதாம் இடமான தனுசு ராசியில் அமர்ந்துள்ளார். தற்போது எட்டாம் வீட்டில் விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் குருவும் அதிசாரமாக சென்று அமரப்போகிறார். பின்னர் வக்கிரமடைந்து விருச்சிகத்திற்கு சென்று அக்டோபர் இறுதியில் தனுசு ராசிக்கு செல்வார். ராகு கேது சஞ்சாரமும் மார்ச் மாதம் நிகழப்போகிறது. கடகம் ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ராகுவும், மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரக மாற்றம் எந்தெந்த ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகத்தை அளிக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. திரைகடல் ஓடி திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். இதனால் உங்கள் சமுதாய அந்தஸ்தும்,மதிப்பும் மரியாதையும், உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையப்போகிறது.

ஆண்டு துவக்கத்தில் ஜனவரி, பிப்ரவரியில் சாதாரணமாக இருந்தாலும் மார்ச் மாதம் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி அளவு கடந்த நன்மைகளைத் தரப்போகிறது. ராகுவினால் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அடிக்கடி விமானத்தில் பறக்கப் போகிறீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம்.

கேது பகவான் இந்த வருடம் மார்ச் மாதம் பத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு வருகை புரிவது சிறப்பாகும். இதுவரை பத்தில் இருந்து வேலையில் அலைச்சல்களை, அடிக்கடி தொழில் மாற்றங்களை தொழில் நஷ்டங்களை தந்து வந்த கேது,இந்த வருடம் ஒன்பதாம் பாவத்துக்கு வருவது நல்லது.

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள குரு பெயர்ச்சி சில சாதகமான பலன்களை தரப்போகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்திருந்தவர்களின் கனவு நனவாகப் போகிறது.

சனிபகவான் ஒன்பதாம் வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். தற்போது எட்டாம் வீட்டில் அமர்ந்துள்ள குரு அக்டோபரில் சனியோடு இணையப்போகிறார். இந்த சேர்க்கை உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. அயல்நாட்டு வியாபாரம் சூடுபிடிக்கும். வருமானமும் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். படித்து விட்டு அரசு வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு கப்பல், விமானம், ராணுவம், தீயணைப்புத்துறையில் வேலை கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இது அஷ்டம சனிக்காலம். 2019ஆம் ஆண்டு முழுவதும் சனிபகவான் எட்டாம் வீட்டில்தான் குடியிருக்கிறார். தற்போது குரு ஏழாம் வீட்டில் அமர்ந்து உள்ளார். அக்டோபர் மாதம் குருபகவானும் அஷ்டம ஸ்தானத்திற்குச் செல்கிறார். அயல்நாடு வியாபாரம் கைகூடி வரும் என்றாலும் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

இந்த காலங்களில் புதிய தொழில் முயற்சிகள் வேண்டாம். பேராசை படவேண்டாம். அகலக்கால் வைப்பது ஆபத்து. கல்வியில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற முடியும். விளையாட்டுத்தனமாக இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

அஷ்டமச்சனியிலிருந்து பாதிப்பை குறைத்து கொள்ள காலபைரவரை சனிக்கிழமை சனிக்கிழமை சென்று வழிபட்டு வரலாம். சனி காலபைரவர் சொன்னால் தான் கேட்பார்.சனியின் குருநாதர் இந்த காலபைரவர்.ஆஞ்சநேயருக்கும் சனிக்கிழமை சனிக்கிழமை நெய்விளக்கு போட்டு வர சனியால் வரக்கூடிய அத்துனை தொல்லைகளையும் விலக்க முடியும்.

மிதுனம்

மிதுனம்

புத்திசாலியான புதனை ஆட்சி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே... வரப்போகும் புத்தாண்டு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சமூக அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் உயரும். பொருளாதாரம் உயரும்.

அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும்.

ராகு ஜென்ம ராசியில் அமர்வதால் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் சென்று ராகு,கேதுக்களுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். அருகில் உள்ள புற்றுக்கோவிலுக்கு சென்று வர ராகு ,கேதுவால் வரக்கூடிய தோஷங்கள் விலகும். பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து புளியோதரை படைத்து வணங்கலாம்

கடகம்

கடகம்

சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே... அலுவலகத்தில் பதவிஉயர்வு, சம்பள உயர்வு என கொண்டாட்டமான,குதூகலமான ஆண்டாகவே 2019 இருக்க போகின்றது. ஆண்டுகிரகங்களான ராகு, கேது,சனி,குரு போன்ற கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நற்பலன்களை தர காத்திருக்கின்றன.

தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறக்கும். சிறிய அளவிலான முயற்சிக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். தடைபட்ட பணி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.

மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்றபடி வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்புவர்களின் நோக்கம் நிறைவேறும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கப்பெரும் வருடமாக இந்த 2019 இருக்க போகின்றது.

குருபகவான் நான்கில் இருந்து பத்தை பார்ப்பதால் தொழில் சிறக்கும். தொழிலில் அபாரமான லாபமும் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து விடும். பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், தொழில் பாராட்டுகளும் ,பேரும் புகழும் கிடைக்கும். உங்களுக்கு தரப்பட்ட டார்கெட்டை எட்டி நீங்கள் வேலை செய்யும் இடத்தில் புகழப்படுவீர்கள்.

ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் உண்டாகும். ராகு பதினொன்றில் இருப்பதால் வெளிநாடு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். குரு எட்டாம் வீட்டினை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குருபகவான் நீர் ராசியில் இருந்து, இன்னொரு நீர் ராசியான தன்னுடைய எட்டாம் வீடான மீனத்தை பார்த்து,தனது ஒன்பதாம் பார்வையால் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான கடகத்தை பார்த்து எட்டு பன்னிரண்டாம் வீடுகளும் குருவின் பார்வையால் சுபத்தன்மை அடைவதால் வெளிநாடு உத்யோகம் கிடைக்கும்.

மாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகம் வைத்து கொள்ள முடியாத நிலை உண்டாகும். மதிப்பெண்கள் குறைய கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சற்றே நிம்மதி அளிக்கும். நல்ல நண்பர்களின் உறவு நன்மை தரும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துவது அவசியம்.

கன்னி

கன்னி

அறிவின் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு 2019ஆம் ஆண்டு சற்றே போராட்டங்கள் நிறைந்த ஆண்டுதான் காரணம் அர்த்தாஷ்டம சனி ஒரு யுகத்திற்கான போராட்டத்தை ஏற்படுத்துவார். சில போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி விடுவீர்கள். மேலதிகாரிகள், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க சிரமம் ஏற்படும்.

அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதால் கல்வியில் முழுகவனம் செலுத்த முடியும். நல்ல நண்பர்களின் சேர்க்கை நற்பலன்களைத் தரும்.

துலாம்

துலாம்

காதல் நாயகன் சுக்கிரனை ராசிநாதனக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த புத்தாண்டில் குருபகவான் இரண்டாம் இடத்தில் இருந்து உங்களுக்கு நல்ல சுபபலன்களை வாரி வழங்க காத்து கொண்டு இருக்கிறார். குருபகவான் இரண்டாம் இடத்திலே சஞ்சாரம் செய்யும் போது லட்சுமி கடாட்சம் உண்டாகும்... லட்சுமி கடாட்சத்தால் பணம் நிறைய வரும். அரசாங்க உதவி, மேலிடத்து அனுகூலம், பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும்.

இதுநாள் வரை தடைபட்டு வந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். சிலருக்கு வேண்டிய இட மாற்றங்ககளும் கிடைத்து குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும்.

மாணவர்களுக்கு மந்தநிலை மறையும்.நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேலும் சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். அரசு உதவியும் சலுகைகளும் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

2019ஆம் ஆண்டு உங்களுக்கு பாதசனி, ஜென்ம குரு காலம் என்பதால் சிரமங்களை ஏற்படுத்தும் என்றாலும் உங்களுக்கு இந்த ஆண்டு எல்லாமே நல்ல நேரம் தான். குரு உங்கள் ராசிக்கு வந்து அமர்ந்து அங்கிருந்து 5,7,9 ம் இடங்களை பார்த்து இந்த இடங்களுக்கு நன்மை செய்கிறார். 2019 மார்ச் மாதத்தில் ராகு 8ஆம் வீட்டிலும் ,கேது 2ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். ராகு எட்டில் மறைவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் ஆகும். தொழில் ஸ்தானத்திற்கு பதினொன்றாம் இடம் இந்த எட்டாம் இடம். எனவே செய்யும் தொழில் சிறக்கும். தொழிலில் ராகுவால் லாபங்கள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு யோகமான ஆண்டாக அமையும் சிலருக்கு மேல்படிப்பு யோகம் அமையும். வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம்.

தனுசு

தனுசு

இளைய சகோதரர்களால் நன்மைகள் இருக்கும் ஆண்டாக 2019 ஆம் ஆண்டு இருக்க போகின்றது.எவ்வளவு கஷ்டம் வந்தாலும், தைரியத்துடன்

சமாளிப்பீர்கள். சனி ராசியிலே சஞ்சரிப்பதால் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். ஈசியாக முடியக்கூடிய வேலைகள் கூட இழுத்தடிக்கும் என்றாலும் எதையும் சமாளிப்பீர்கள். ஜென்ம சனி நடக்கும் காலம் என்பதால் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக்கூடாது. வேலைப்பளு கண்டிப்பாக அதிகமாக இருக்கும் என்பதால் டார்கெட் பிரச்சனை இருக்கும் என்பதால் அதிகமாக உழைக்க தயாராக இருங்கள்.

இந்த ஆண்டில் எதற்காகவும் அவசரப்பட வேண்டாம். மாணவர்கள் கவனமுடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைய முடியும்.

மகரம்

மகரம்

2019ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு பொற்கால ஆண்டாக அமையப்போகிறது. குருபகவான் பதினொன்றில் இருந்து உங்களுக்கு சாதகமான பலன்களை தந்து கொண்டு உள்ளார். வாகனம் வாங்கக்கூடிய யோகமும், லட்சுமி கடாட்சத்தால் பொன், பொருள் சேர்க்கையும், அரசாங்க உதவியும் கிடைக்கும். தொழில் இடமாற்றம் ஏற்படும். இடைப்பட்ட வயதில் இருப்பவர்கள் பொங்கு சனி மூலம் ஆதாயம் அடைவார்கள். ஏந்த முயற்சி எடுத்தாலும் தடங்கள் எற்பட்டு வெற்றி பெரும். அலுவலகத்தில் அலைச்சல் எற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வேலை இடமாற்றம் கிடைத்தால் விரும்பி ஏற்று கொண்டு சென்றால் நல்ல ஆதாயம் கிடைக்கும். அக்டோபர் மாதம் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் நிறைய சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் வரும். உயர் பதவியும்,சம்பளமும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். படிப்பில் மிகுந்த கவனம் தேவைப்படும் காலம். மாணவ மாணவிகள் நன்கு படிப்பர். நல்ல மதிப்பெண்கள் பெரும் காலம். கடைசி நேரத்தில் விரும்பிய படிப்பு கிடைக்காமல் போகும் என்பதால் சுதாரித்துக்கொள்ளது நல்லது.

கும்பம்

கும்பம்

சனியை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே... இந்த ஆண்டு உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பது யோகமான ஆண்டாக அமைந்துள்ளது. குருபகவான் பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு பத்தில் வரும் போது பதவி பறிபோகும் என்ற கூற்று உள்ளது. அதன்படி சிலருக்கு வேலைப்பளு கூடும். சிலருக்கு விரும்பிய இடங்களுக்கு பணி இடமாற்றம் இருக்கும்.

ராசிநாதன் உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பதால் எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் நீங்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியும். சமாளித்து விடுவீர்கள். மாணவர்களுக்கு இது நன்மை தரக்கூடிய ஆண்டாக அமைகிறது. அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள். மேற்படிப்பு யோகம் அமையும் காரணம் குரு உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டினை பார்க்கிறார். கேட்ட இடத்தில் கல்விக்காக வங்கிக் கடன் கிடைக்கும்.

மீனம்

மீனம்

குருவை ராசிநாதனாகக் கொண்ட 2019 ஆண்டில் உங்களின் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும் ஆண்டாக அமையப்போகிறது. யோகமான ஆண்டாகவும் அமையப்போகிறது. இந்த ஆண்டில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்த்து கொண்டு உள்ளார். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பது யோகம். ஒன்பதாம் இடத்து குரு உங்களுக்கு நல்ல பெயரையும், தொழிலில் லாபங்களையும் அள்ளித்தரப்போகிறார்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் இளைஞர்கள் வெளிநாடு செல்ல முடியும். மீனம் நீர் ராசி. குரு நீர் ராசியில் இருந்து நீர் ராசியை பார்த்து கொண்டு இருப்பதாலும், சனி பத்தில இருந்து பன்னிரண்டாம் வீட்டைப் பார்ப்பதாலும், ஒன்பதாம் இடம் மற்றும் பன்னிரண்டாம் இடம் வலுப்பெறுவதால் வெளிநாடு சென்று இளைஞர்கள் வேலை பார்க்க முடியும்.

ராகு கேது பெயர்ச்சியும் நல்ல முறையில் அமைந்துள்ளது. மார்ச் முதல் நான்காம் வீட்டில் ராகுவும், பத்தாம் வீட்டில் கேதுவும் அமரப்போவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். பத்தில் ஒரு பாவி வேண்டும் என்பார்கள் சனி, கேது என இரண்டு பாவிகள் சஞ்சரிப்பது நல்லது. கேதுவால் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும்.சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். குரு உங்கள் வீட்டினை பார்ப்பதால் மாணவர்கள் தேர்ச்சி பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் அமையும்.

English summary
2019 New Year Education Horoscope Predictions for 12 Zodiac signs Mesham to Meenam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X