அட்சய திருதியை நாளில் வாலாஜபேட்டை லட்சுமி குபேரருக்கு ஒரு லட்சம் காசுகள் அபிஷேகம்
அட்சய திருதியை நாளை முன்னிட்டு லக்ஷ்மி குபேரருக்கு ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள்,தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற்றது.
சென்னை: அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாலாஜா சாலையில் கிழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் கோவிலில் ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள்,தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றன.
அழகாபுரி, குபேரபுரி, ஐஸ்வர்யபுரி, ஆரோக்கியபுரி சம்பத்துபுரி, ஸ்வர்ணபுரி, சௌபாக்யபுரி என்று பல்வேறு வகையான பெயர்களில் பக்தர்கள் அழைத்து மகிழும் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி குபேர கோவிலில் வெள்ளிக்கிழமை அட்சய திருதியை முன்னிட்டு சாம்ராஜ்ய லட்சுமி ஹோமம்,ஸ்வர்ண ஆகர்ஷ்ண பைரவர் ஹோமம், ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஹோமம் மற்றும் லக்ஷம் காசுகள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சோளிங்கர் வாலாஜா சாலையில் கிழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் கோவிலில், அட்சய திருதியை தினத்தை யொட்டி, வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு மகா சங்கல்பம், லக்ஷ்மி குபேரர் குங்கும அர்ச்சனை ஸ்வர்ண பைரவர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இன்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 7.30 மணிக்கு புண்ணியாவாகனம். மேலும் நோய்கள் நீங்கவும், ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி அருள் பெறவும் , சுப நிகழ்ச்சிகள் பெறவும் மஹாலக்ஷ்மி, ஸ்வர்ண பைரவர் சாம்ராஜ்ய லக்ஷ்மி மூலமந்திர ஹோமம் நடைபெற்று 10 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 10.30 மணிக்கு லக்ஷ்மி குபேரருக்கு மஹா திருமஞ்சனம் சிறப்பு அலங்கார மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து லக்ஷ்மி குபேரருக்கு ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள்,தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற்றது. இந்த நாளில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ராஜ தேவியாக விளங்கும் சாம்ராஜ்ய லக்ஷ்மியை வணங்கினால், வறுமை நீங்கும், குறையாத செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
ஹோமத்தில் பங்கேற்றவர்களுக்கு, குபேர யந்திரம், குபேர காசு, குபேர ரக்ஷை,குபேர குங்குமம்,அட்சதை பிரசாதங்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கபட்டன.
அட்சய திருதியை முன்னிட்டு லட்சுமி குபேரர் சந்நிதியில் வைத்து பூஜித்த ஒரு லட்சம் 1.ருபாய் நாணயம் லட்சம் பேருக்கு குபேர ஹோம பிரசாதத்துடன் இலவசமாக அனுப்பி வைக்க உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் முழு முகவரியுடன் ரூபாய் 100 தபால்,/கூரியர் செலவுக்கு அனுப்பி பெற்று கொள்ளலாம் தொடர்புக்கு 94433 30203.