For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல்வாதிகளுக்கு ரவுண்டு கட்டி ஆட்டம் காட்டப்போகும் குரு, ராகு - கேது, சனி

இந்த ஹேவிளம்பி வருடத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு குரு, ராகு- கேது, சனிப் பெயர்ச்சி நிகழ்வது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ராகு -கேது, குரு, சனி ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி இந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நவ கிரங்களும் தங்கள் ஓடுபாதையில் நகர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றன என்கிறது வான சாஸ்திரம்.

வானசாஸ்திரத்தினை அடிப்படையாக கொண்ட ஜோதிடத்தில் சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும், முக்கூட்டு கிரகங்களான சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஒரு மாதத்திற்கு ஒரு முறையும், செவ்வாய் ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறையும் பெயர்ச்சியடைகின்றன. இந்த பெயர்ச்சி அதிக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.

கிரகங்களின் இடமாற்றம்

கிரகங்களின் இடமாற்றம்

குரு வருடத்திற்கு ஒரு முறையும் ராகுவும் கேதுவும் ஒன்றை ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகின்றனர்.

முன்று கிரகங்களின் பெயர்ச்சி

முன்று கிரகங்களின் பெயர்ச்சி

இந்த 2017ஆம் ஆண்டில் முதலில் ராகு கேது பெயர்ச்சி நிகழ்ந்தது. இதன் பின்னர் செப்டம்பரில் குரு பெயர்ச்சியும், டிசம்பரில் சனிப்பெயர்ச்சியும் நிகழ்கிறது. இதனையடுத்து 2020ஆம் ஆண்டுக்குள் 2 முறை குருப்பெயர்ச்சியும் 2 முறை ராகு - கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது. தமிழக அரசியலிலும், அரசியல்வாதிகளுக்கும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வாக்கிய பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைகள் விலகும்

தடைகள் விலகும்

ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான் இதுவரை துயரங்களையும் துன்பங்களையும் அளித்ததோடு வீண் வழக்குகள் பிரச்சனைகள், போராட்டங்கள், அவமானங்களை ஏற்படுத்தியிருப்பார். இனி 9வது இடத்தில் சஞ்சாரிக்கப் போகும் சனிபகவான் நன்மையை தரப்போகிறார். குரு இப்பொழுது ராசிக்கு 7வது இடத்தில் இருக்கிறார். ராகு உங்கள் ராசிக்கு 4வது இடத்திலும் கேது 10ஆம் இடத்திலும் அமர்ந்துள்ளனர். அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகி புதிய பதவிகள் பொறுப்புகள் வந்து சேரும். மக்களிடையே ஆதரவு பெருகும். தொண்டர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வர். எதிரிகளின் தொல்லைகள் இருந்தாலும் அதை தெய்வ அனுகூலத்தால் வெற்றி கொள்ள வாய்ப்பு அமையும். ஜால்ரா போடும் நபர்களை புறக்கணித்தால் நன்மைகள் நடக்கும். பழனி, சுவாமிமலை சென்று பாலமுருகனை வணங்குங்கள்.

ஆட்டம் காட்டும்

ஆட்டம் காட்டும்

அட்டமத்து சனி நடைபெறுகிறது. 6ஆம் இடத்து குருவும் சாதகமாக இல்லை. ராகு உங்கள் ராசிக்கு 3வது இடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 9வது இடத்திலும் அமர்ந்துள்ளார்.
நண்பர்கள், கூட்டாளிகள், சகாக்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதாக நினைத்து ஏமாறவேண்டாம். யார் எப்பொழுது எப்படி மாறுவர் என்று கூற முடியாது. எனவே எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். 2ஆம் இடத்தை சனி பார்ப்பதால் நாவடக்கம் தேவை. அரசியல் எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. தொண்டர்களின் உண்மையான அன்பையும் ஆதரவையும் பெற தீவிரமாக பாடுபட வேண்டியிருக்கும். அரசாங்கத்தால் எதிர்பாரத துன்பங்கள் துயரங்கள் வந்து சேரும். அடக்கத்தினால் மக்களின் ஆதரவை தக்க வைக்கலாம். குரு 7ஆம் இடத்திற்கு அடுத்த ஆண்டு இடம் பெயரும் போது சிக்கல்கள் ஓரளவிற்கு நீங்கும். பெருமாள் ஆலயங்களில் சென்று மகாலட்சுமி தாயாரை வெள்ளை தாமரை வைத்து வணங்கலாம்.

எதிரிகளிடம் ஜாக்கிரதை

எதிரிகளிடம் ஜாக்கிரதை

கண்டகச்சனியால் அரசியல்வாதிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. குரு உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் அமர்ந்துள்ளார். ராகு உங்கள் ராசிக்கு 2வது இடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 8வது இடத்திலும் அமர்ந்துள்ளார். கூட இருந்தே போட்டு வாங்கி மேலிடத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். தொண்டர்களிடம் கெட்ட பெயர் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பர். வழக்குகள் விடாது விரட்டும். குரு அடுத்த ஆண்டு விருச்சிகத்திற்கு வரும் காலங்களில் எண்ணங்கள் ஈடேறும். பாடுபட்டதற்கேற்ப பலன்களும் உண்டாகும். இந்த நேரத்தில் ஆணவம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீகாளஹஸ்தி சென்று சுவாமி, அம்பாளை வணங்கினால் நன்மைகள் கிடைக்கும்.

மதிப்பு உயரும்

மதிப்பு உயரும்


ஆறாமிடத்து சனியால் எதிரிகள் தொல்லை ஒழியும். குரு உங்கள் ராசிக்கு 4ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். ஜென்ம ராசியில் ராகுவும், 7வது இடத்தில் கேதுவும் அமர்ந்துள்ளனர். நோய் நொடிகள் நீங்கும்.
உங்களை பற்றிய தவறான விமர்சனங்கள் குறைந்து உங்களைப் பற்றிய உயர்வும் மதிப்பும் அதிகரிக்கும். தொண்டர்களின் உண்மையான அன்பும் ஆதரவும் கிட்டும். அரசால் லாபம் ஏற்படும். உங்களின் எதிரிகள் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பார்கள். மக்களின் ஆதரவு கிட்டும். வழக்குகள் சாதகமாக இராது. தலைமையின் அன்புக்கு கட்டுப்படுவீர்கள். அந்தஸ்து அதிகரிக்கும். செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். அதே நேரத்தில் பிறரின் முகஸ்துதிக்கு மயங்கி விட வேண்டாம். மந்திராலயம் சென்று மகான் ராகவேந்திரரை வணங்குங்கள்.

எச்சரிக்கை தேவை

எச்சரிக்கை தேவை


5ஆம் இட சனியால் பிரச்சினைகள் தீரும். ராசிக்கு 12ஆம் இடத்தில் ராகுவும், 6ஆம் இடத்தில் கேதுவும் அமர்ந்துள்ளனர். குருபகவான் ராசிக்கு 3வது இடத்தில் அமர்ந்துள்ளார். உங்களின் வாக்கு ஸ்தானத்தை சனிபார்வையிடுவதால் வார்த்தைகளில் கவனம் தேவை. நெருக்கடியான நேரங்களில் சரியான முடிவு எடுத்தல் வேண்டும். தேவையற்ற போட்டிகள் தவிர்த்தல் நலம். எதிரிகள் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். உங்களுக்கென்று இருக்கும் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் வாழ வேண்டும்.

திருச்செந்தூர் முருகனை வணங்கி வாருங்கள். கன்னியாகுமரி அம்மனை வணங்குவதன் மூலம் கூடுதல் நலம் பெறலாம்.

ஜெயிப்பது சிரமம்

ஜெயிப்பது சிரமம்


சனிபகவான் அர்த்தாஸ்டம சனியாக அமர்ந்துள்ளார். குருபகவான் 2ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். ராகு உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்திலும் அமர்ந்துள்ளனர். சனியின் சஞ்சாரத்தால் எத்தனை பாடுபட்டாலும் ஜெயிப்பது சிரமமாகவே இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அரசியல் வாழ்வு சற்று சுமாராக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தாலே போதுமானதாகும். எதிரிகள் அதிகரிக்கும் காலம் இது. அரசியலில் உயர்ந்த இடத்தை பிடிக்க தேவையான தகுதிகளை வளர்த்து கொள்ளல் வேண்டும். உடனுக்குடன் உடன் முடிவெடுக்கும் திறமை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.

திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வணங்கி வரலாம். கிரிவலம் செல்வது கூடுதல் சிறப்பு.

பதவிகள் தேடி வரும்

பதவிகள் தேடி வரும்

ஏழரை சனி முடிந்து விட்டது. இனி எல்லாம் ஏற்றம்தான். மூன்றாமிடத்து சனியால் முயற்சிகள் கைகூடும். ஜென்மகுருவினால் சற்றே சாதகமற்ற சூழ்நிலை நிலவுகிறது. ராகு உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 4வது இடத்திலும் அமர்ந்துள்ளனர். அரசியல் வாழ்வு சாதகமாக இருந்து வரும். தொண்டர்களின் உண்மையான அன்பும் ஆதரவும் கிட்டும். அரசால் ஆதாயம் ஏற்படும். வழக்குகள் சாதகமாக வந்து சேரும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். எதிரிகளால் தொல்லைகள் நீங்கும். எதையும் தைரியமாக சந்திக்கும் ஆற்றலும் சந்தர்ப்பமும் அமையும்.
சங்கரன் கோவில் சென்று சங்கர நாரயணரையும், கோமதி அம்மனையும் வணங்கி வரலாம்.

மக்களின் ஆதரவு கிட்டும்

மக்களின் ஆதரவு கிட்டும்

அரசியலில் புது எழுச்சிப் பெறுவீர்கள். ராசிக்கு இரண்டாம் இடத்தில் பாதசனியாக சனிபகவான் அமர்ந்துள்ளார். குருபகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். ராகு உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 3ஆம் இடத்திலும் அமர்ந்துள்ளனர். உங்களைப் பற்றிய அவப் பெயர்கள் வந்து போகும். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய காலம் இதுவாகும். மறைமுக எதிரிகள் அதிகரிப்பார்கள். அவர்களை வெற்றி கொள்ளும் அறிவும் சாமர்த்தியமும் பலமும் தானகவே வந்து சேரும். வாக்கு ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கலாம். அரசியலில் உயர்பதவி அந்தஸ்து கூடி வரும். மக்களின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் இயற்கையாகவே கிடைக்கும். ஸ்ரீ ரங்கநாதரை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்கி வரலாம்.

எதிரிகள் தொல்லை

எதிரிகள் தொல்லை

ஜென்மசனி என்பதால் கட்சி பணியும், அரசியல் பணியும், கடுமையாக நெருக்கடிகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். ராகு உங்கள் ராசிக்கு 8வது இடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்திலும் அமர்ந்துள்ளனர். தொண்டர்களின் அன்பும் மக்களின் ஆதரவையும் பெற பாடுபட வேண்டியது இருக்கும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் வந்து போகும் எனவே எதிரிகள் விஷத்தில் அதிகக் கவனம் தேவை. உங்களை முடக்கி வைக்க நடக்கும் முயற்சிகளை முறியடித்து வெற்றி பெற உங்கள் முழு பலத்தையும் உபயோகிக்க வேண்டிய காலம் இது. பழனி முருகனை வளர்பிறை சஷ்டியில் வணங்கி வர நலம் உண்டாகும்.

கவனம் தேவை

கவனம் தேவை

விரய ஸ்தானத்தில் சனி அமர்வதால் எதிரிகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. ஏழரை சனி ஆரம்பமாகிறது. ராகு உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். கேது உங்களின் ஜென்மராசியில் அமர்ந்துள்ளார். குரு உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். அரசியலில் எதிர்பார்த்த பதவி உயர்வுகளில் சற்று தடை ஏற்பட்டாலும் பின்னால் நற்பலன்கள் அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவு குறைந்தாலும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துக் காணப்படும். தேவையற்ற போட்டிகளைத் தவிர்த்தல் நலம். விட்டதை பிடிக்க கடுமையாகப் போராட வேண்டியது வரும். உங்களுடைய தனித் தன்மையை, தலைமை பண்பை ஆளும் தன்மையை நன்கு வளர்த்து கொள்வது அவசியம். ஞாயிறன்று ஸ்ரீகோதண்ட ராமரையும், யோக ஆஞ்சநேயரையும் வழிபடலாம்.

தடைகள் விலகும்

தடைகள் விலகும்

லாபசனி என்றாலும் அரசியல் வாழ்வு ஏற்ற இறக்கமாக இருந்து வரும். குருபகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். ராகு உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 12ஆம் இடத்திலும் அமர்ந்துள்ளனர். எதையும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் சூழ்நிலைக்கு ஏற்பவும் சந்தர்ப்பத்திற்கு ஏற்பவும் முடிவு எடுத்தல் வேண்டும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் இருந்தாலும் தலைமை இடத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். எதிரிகள் தொல்லை அதிகரித்தும் அவர்களால் முன்னேற்றத்தில் அதிக தடையும் ஏற்படும். நிறைய விஷயங்களில் அடக்கியே வாசித்தல் வேண்டும். பவுர்ணமி நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுவது நலம் தரம்.

கவனம் அவசியம்

கவனம் அவசியம்

10ஆம் இடத்தின் சனிபகவான் கருமசனியாக அமர்ந்துள்ளார். குருபகவான் உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். ராகு உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்திலும் அமர்ந்துள்ளனர். இந்த ராசியைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் புகழ் ஓங்கினாலும் பெரிய பதவி எதையும் அடைவதோ தக்கவைப்பதோ கடினம். நெருக்கடியான நேரங்களில் சரியான முடிவு எடுத்தால் சிக்கல்களில் இருந்து தப்பலாம். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. அதே சமயம் தொண்டர்களின் அன்பும் ஆதரவும் அதிகரித்துக் காணப்படும். தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் மக்களுக்கான தொண்டு செய்வதை அதிகரித்தல் வேண்டும். தலைமையிடத்தில் கவனமாகப் பேசிப் பழகுதல் வேண்டும். வழக்குகள் சாதகமாக இருந்து வரும்.

ஸ்ரீ சனீஸ்வரரையும், சிவபெருமானையும் மாத சிவராத்திரி நாளில் வழிபடலாம்.

English summary
Political changes to Ragu Kethu, Sani, Guru Peyarchi Palangal 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X