For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழரை சனி உங்களை பிடித்திருப்பதற்கான அறிகுறிகள்... என்ன பரிகாரம் செய்யலாம்

நவகிரகங்களில் சனி பகவானின் பார்வைக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சனியின் பிடியில் நாம் சிக்கியிருக்கிறோம் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்ந்து கொள்ளலாம். சனியினால் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க சில பரிகாரங்களை செய்தால் போதும் ப

Google Oneindia Tamil News

சென்னை: நவ கிரகங்களில் சனி பகவான் கர்மகாரகன். சனி நீதிமான் என்பதால் ஒருவருக்கு சோதனைகளை கொடுத்து அதற்கான படிப்பினைகளை கற்றுக்கொடுப்பார். சனியால் கிடைக்கும் பலன்கள் எந்த அளவிற்கு அதிகமானதோ அதே போல பாதிப்புகளும் அதிகம் இருக்கும் என்பதால்தான் பலரும் பயப்படுகின்றனர். சிலருக்கு சனியின் பாதிப்பு பற்றி தெரியாது. நமக்கு ஏழரை நடக்குதோ என்று அவர்களாகவே நினைத்துக்கொள்வார்கள். சனிபகவானின் பிடியில் நாம் சிக்கியிருக்கிறோம் என்பதை சில அறிகுறிகளை வைத்தே அறிந்து கொள்ளலாம்.

சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் இருந்தால் அர்த்தாஷ்டம சனியாகவும் ஏழாம் வீட்டில் இருக்கும் போது கண்டச்சனியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவார். எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் போது அஷ்டம சனியாகவும் பிரச்சினையை தருவார்.
விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என ஏழரை ஆண்டுகாலம் படுத்தி எடுத்து பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்து விடுவார்.

சனிபகவான் வாகனமான காகம், சனியின் வசிப்பிடங்களாக கருதப்படும் இடங்களை நாம் கடக்க நேரிடும் போது சில பாதிப்புகள் ஏற்படும் அதை வைத்தே நமக்கு சனியால் சில சங்கடங்கள் வரப்போகிறது என்பதை அறியலாம். அதற்கான பரிகாரம் செய்தால் போதும் பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

அசுத்தமானவர்கள்

அசுத்தமானவர்கள்

சனியின் பிடியில் இருப்பவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். லேட்டாக எழுந்திருப்பார்கள். அசுத்தமானவர்களாக இருப்பார்கள். சுத்தமாக இருக்கமாட்டார்கள். பல் கூட விளக்காமல் காபி குடிப்பார்கள். அடிக்கடி விழுந்து எலும்பில் அடிபடுவார்கள். இவர்கள் எல்லாம் சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள்.

துரத்தும் காகம்

துரத்தும் காகம்

காகம் ஒருவரை விடாமல் துரத்தும். சாதாரணமாக செல்லும் போதே எச்சம் போடும். சிலரை தலையில் உடம்பில் கொத்தும் அப்போது கோச்சாரப்படி சனி நமக்கும் சங்கடமான நிலையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

குப்பை குவியல்கள்

குப்பை குவியல்கள்

குப்பை லாரியில் இருக்கும் குப்பை திடீரென உங்கள் மீது விழும். தெரியாமல் மலத்தை மிதித்து விடுவீர்கள். சிலருக்கு ரயிலில் பயணம் செய்யும் போது பாத்ரூம் அருகில் சீட் கிடைக்கும். இரவு முழுவதும் நாற்றத்திலேயே பயணிக்க வேண்டியிருக்கும்.

பச்சரிசி பரிகாரம்

பச்சரிசி பரிகாரம்

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.

சனி பாதிப்பு நீங்கும்

சனி பாதிப்பு நீங்கும்

பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

சனிபகவான் பாதிப்புகள்

சனிபகவான் பாதிப்புகள்

அனுமாரை வழிபட சனி பகவானால் ஏற்படும் தொல்லைகள் குறையும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கலாம். தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கலாம். சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கும் , விதவைகளுக்கும் உதவி செய்யுங்கள். தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

காகத்திற்கு எள் சாதம்

காகத்திற்கு எள் சாதம்

சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம். வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும். விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

விநாயகர் பூஜை

விநாயகர் பூஜை

வீட்டின் பூஜை அறையில் விநாயகரின் படம் மற்றும் சனி பகவானின் இரும்பு உருவம் கொண்ட படத்தை வைத்து பூஜை செய்யலாம். வீட்டில் விளக்கை ஏற்றி முதலில் முதற்கடவுள் கணேசனை வணங்கி வழிபாட்டை தொடங்கிய பின் கருப்பு எள்ளை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். சனி பூஜை அன்று ஒரு பிராமணருக்கு இரும்பை தானமாக வழங்கினால் மிகவும் நல்லது. பூஜையின் இறுதி நாளில் அனுமான்,சிவன் மற்றும் சனி பகவான் கோயிலுக்கு சென்று வணங்கி வழிபட்டு வர சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

English summary
Sani Peyarchi Palan 2020 Tamil Saturn transit from Dhanusu to Makaram. Planet Shani represents Lord Shani who is the God of Justice. Many people fear that the greater the benefits of Saturn, the greater the harm. Some people are unaware of the impact of Saturn. They think they are the seven of us. We can tell by certain signs that we are in the grip of the Lord.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X