செப்டம்பர் மாத ராசிபலன் 2019: விருச்சிகம் ராசிக்கு விடிவுகாலம் வரப்போகுது
விருச்சிக ராசிக்காரர்களுக்கு உற்சாகமான மாதமாக அமையப்போகிறது. பட்ட கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது.
Recommended Video
சென்னை: செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம மாதத்தில் பாதி நாட்களும் கன்னி மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், என நான்கு கிரகங்களின் கூட்டணி அமைந்துள்ளது. மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் கன்னி ராசியில் நான்கு கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. செப்டம்பர் பிற்பகுதியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். விருச்சிகத்திற்கு இது சந்தோசமான விசயம். தொழில் ஸ்தானத்திலும் லாப ஸ்தானத்திலும் கூட்டணி அமைக்கும் கிரகங்களினால் இந்த மாதம் அற்புதங்கள் நடைபெறும். வாக்கில் சனி இருப்பதால் நாக்கில் கவனம் தேவை.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் செப்டம்பர் 10,11 தேதிகளில் சுக்கிரன், புதன் கிரகங்கள் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 25ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். சனிபகவானும் நேர்கதியில் சஞ்சரிப்பது விருச்சிகம் ராசிக்கு யோகமான கால கட்டம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மாத முற்பகுதியில் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருக்கும் நான்கு கிரகங்கள் மாத இறுதியில் லாப ஸ்தானமான கன்னி ராசியில் கூட்டணி சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் மாற்றங்களினால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் என்னென்ன நடக்கும் பண வருமானம், கல்வி, வேலை வாய்ப்பு திருமண முயற்சி எப்படி என்று பார்க்கலாம்.
சந்தோஷம் தரும் மாதம்
சந்தோசமான மாதமாக அமையும். உங்களுக்கு சிறப்பு கிடைக்கும். பாத சனி இருந்தாலும் வக்ரத்தில் பாதிக்கப்பட்டீர்கள் இனி சனி வக்ர நிவர்த்தி அடைவதால் பாதிப்புகள் குறையும். இனம் புரியாத உற்சாகம் பிறக்கும். 10ஆம் வீட்டில் நான்கு கோள்களின் கூட்டணியால் பலம் கிடைக்கும். பதவி அதிகாரம் கிடைக்கும். தைரியம் கூடும். விருச்சிகத்திற்கு குருவினால் கிடைக்கக் கூடிய நன்மைகள் பலனை முன்கூட்டியே கொடுக்க ஆரம்பித்து விடும்.
கஷ்டங்கள் மறையும்
விருச்சிக ராசிக்காரர்களே நீண்ட காலமாக ஒருவித கஷ்டத்தில் சிக்கி தடுமாறிக்கொண்டிருக்கிறீர்கள். இனி நன்மைகள் நடைபெறுவதற்கான காலம் நெருங்கி வருகிறது. மாத முற்பகுதியில் தன்னம்பிக்கையை தரக்கூடியதாக இருக்கும். புதிய உற்சாகத்தை தரும். சிறந்த மாதமாக அமையப்போகிறது. கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.
ஒற்றுமை கூடும்
குடும்பத்தில் ஒற்றுமை கூடும், மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதர சகோதரிகள் ஒத்துழைப்பு தருவார்கள். சொத்துக்களை விற்பதால் பணம் வரும்.
தொழில் மீதான மதிப்பும் மரியாதையும் கூடும் வெற்றியும் வளமும் கூடும். பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கப் போகிறது. அடுத்தடுத்து இனி வரும் மாதங்கள் எல்லாம் சிறப்புதான்.
லாப ஸ்தானத்தில் கிரகங்கள்
சுக்கிரன் புதன் 11ஆம் தேதிக்கு மேல் லாப ஸ்தானத்திற்கு வருவதால் மாணவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும் மேற்படிப்புக்கு நன்மைகளை ஏற்படுத்தும் சூரியன் 17ஆம் தேதிக்கு மேல் லாப ஸ்தானத்திற்கு வருவதால் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் நிகழும். கூடவே சிம்மத்தில் 25ஆம் தேதி வரை இருக்கும் செவ்வாய் தனது நான்காம் பார்வையால் விருச்சிக ராசியை பார்ப்பதால் வளர்ச்சியை தரும்.
வாக்கில் சனி நாக்கில் கவனம்
திருமணம் பேச்சுவார்த்தையை தற்சமயம் தொடங்க வேண்டாம். இரண்டாம் வீட்டில் உள்ள சனி விலகும் வரை காத்திருக்கவும். குடும்ப பிரச்சினையை விட்டுக்கொடுத்து போவதன் மூலம் தீர்க்கலாம். மனக்குழப்பத்தினால் பிரச்சினைகள் வரும். எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள்.