கறுப்புதான் சனிக்கு பிடிச்ச கலரு... இது சனி பயோடேட்டா
சனிபகவானின் நிறம் கறுப்பு, பிடித்த மலர் கருங்குவளை, பிடித்த தானியம் எள். எனவேதான் சனிபகவானை கருங்குவளை மலர் சூடி எள், எண் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
சென்னை: சனிபகவானுக்கு பிடித்த தானியம் எள். அந்த எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அவரை மனதார வேண்டினால் நன்மையே நடக்கும்.
ஈஸ்வரப்பட்டம் பெற்றவர் சனீஸ்வரன். அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். எனவேதான் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு.
தொழில் காரகன் கர்ம காரகன் ஆன சனி பகவான் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உள்ளவர், கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கு வருபவர், நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை சேர்ப்பவர், தீர்க்காயுள் உள்ளவர்.
சனிபகவானின் பயோடேட்டாவை படியுங்கள்:
நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
பால் - அலி
நிறம் - கறுப்பு
தேவதை - யமன்
பிரத்தியதி தேவதை -பிரஜாபதி
இரத்தினம் - நீலக்கல்
மலர் - கருங்குவளை
குணம் - குருரன்
ஆசன வடிவம் - வில்
தேசம் - சௌராஷ்டிரம்
சமித்து - வன்னி
திக்கு - மேற்கு
சுவை - கசப்பு
உலோகம் - இரும்பு
வாகனம் - காகம்
பிணி - வாதம்,வாய்வு
தானியம் - எள்
காரகன் - ஆயுள்
ஆட்சி - மகரம், கும்பம்
உச்சம் - துலாம்
நீசம் - மேஷம்
மூலத்திரிகோணம் - கும்பம்
நட்பு - புதன், சுக்கிரன், இராகு, கேது
பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்
சமம் - வியாழன்
உபகிரகம் - குளிகன்
உறுப்பு - தொடை
திசை காலம் - 19 வருடங்கள்
கோசார காலம் - இரண்டரை வருடம்
ஸ்தலம் - திருநள்ளாறு, குச்சனூர்
சனி பகவான் உச்சம் ஆனால் தொழில் துறையில் சாதனை படைப்பவராகவும் மேலும் தொழில் துறை சார்ந்த சங்கங்களில் தலைமை பொறுப்புகளில் வருபவராகவும் ஆவார், கோயில் ஆன்மீக திருப்பணிகளில் செல்வாக்கு பெற்றவர், நீதிமானாக திகழ்வார், கர்ம வீரராக திகழ்வார், தன் இலட்சியத்தை நோக்கி பொறுமையாக நகர்ந்து வெற்றி அடைவார்.
சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்க காக்கைக்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும். உளுந்து தானியத்தை தானம் செய்யலாம். சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடலாம்.
சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும். பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.