நந்தினி பாம்பு கனவில் துரத்தி வந்து கொத்துதா?- பலன் படியுங்கள்
பாம்பு ஒருவர் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால் அவருக்கு இருந்த கண்டம் அல்லது கெட்ட நேரம் விலகிச் சென்று விட்டதாக அர்த்தம்.
சென்னை: ஆழ்ந்த உறக்கத்திலும் அதிகாலை நேரத்தில் பலருக்கும் கனவுகள் வருகின்றன. நாகினி, நந்தினி என பாம்பு சீரியலை பார்த்து விட்டு படுத்தால் கனவில் விடாது விரட்டுகிறது. பாம்பு கடித்து ரத்தம் வந்தால் பிடித்த சனி விலகிவிடும் என்று பலன் கூறுகிறது.
பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி விட்டு முட்டை வைத்து பரிகாரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
பாம்பு கனவில் வந்தால் நல்லதுதான் என்று பலன்கள் கூறுகின்றன. நாம் காணும் கனவுகளுக்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் அளித்தவர் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். பாம்பை ஆண் பாலியல் உறுப்புடன் ஒப்பிடுகிறார்.
நைஜீரியா பெண்
தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணான கெஹிண்டே அடெகோக். இவர் கடந்த 4 ஆண்டுகளாக கனவில் பாம்புகளுடன் உடலுறவு வைத்து கொண்டதாகக் கூறி வருகிறார். அதாவது, அவரது கனவில் பாம்பு ஒன்று ஆணாக மாறி அவருடன் உடலுறவு கொள்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பாம்புக்கு பிறந்த குழந்தை
கனவு மூலமே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் அடெகோக் கூறினார். அந்த குழந்தைக்கு கீழ்தாடை பகுதியில் பாம்புகளுக்கு இருப்பது போல் கூர்மையான இரு பற்கள் இருந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்த அன்றே இறந்து விட்டது.
பாம்பு கடித்தால் லாபம்
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன் என்று கூறப்பட்டுள்ளது. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும். பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
பாம்பு கடித்தால் லாபம்
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன் என்று கூறப்பட்டுள்ளது. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும். பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
சனி நீங்கும்
பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள். பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம். கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.