For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தைப்பூசம் 2020 அன்னதோஷம் நீங்க ஆரோக்கியம் அதிகரிக்க அற்புத ஹோமங்கள்

தைப்பூசத்தை முன்னிட்டு கார்த்திகை குமரன் மற்றும் வள்ளல் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது.

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: திருமணவரம் வேண்டி 2500க்கும் மேற்பட்ட ஹோமங்கள் நடைபெற்ற வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு கார்த்திகை குமரன் மற்றும் வள்ளல் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து உணவு செரிமானம் ஏற்படவும், அன்னதோஷம் விலகவும் மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு விசேஷ வழிபாடும் முத்தான மூன்று ஹோமங்களாக நடைபெற உள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 08.02.2020 சனிக்கிழமை தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபர்வதி யாகம், சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது. பங்கேற்க உள்ள ஆண், பெண்களுக்கு கலசாபிஷேகமும், தம்பதிகளுக்கு தொட்டில் பூஜையும் நடைபெற உள்ளது.

தைப்பூசத்தை முன்னிட்டு கார்த்திகை குமரன் மற்றும் வள்ளல் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து உணவு செரிமானம் ஏற்படவும், அன்னதோஷம் விலகவும் மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு விசேஷ வழிபாடும் முத்தான மூன்று ஹோமங்களாக நடைபெற உள்ளது.

 தைப்பூசம் 2020: வடலூரில் ஜோதி தரிசனம் காண குவியும் பக்தர்கள் தைப்பூசம் 2020: வடலூரில் ஜோதி தரிசனம் காண குவியும் பக்தர்கள்

கந்தர்வ ராஜ ஹோமம்

கந்தர்வ ராஜ ஹோமம்

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.

சுயம்வர கலாபார்வதி யாகம்

சுயம்வர கலாபார்வதி யாகம்

திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வர கலாபார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகள் நீங்கி உடனே திருமணம் நடைபெற்று மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

சந்தான கோபால யாகம்

சந்தான கோபால யாகம்

குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம் என தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும் என தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அன்னதோஷம் விலகும்

அன்னதோஷம் விலகும்

தைப்பூசத்தை முன்னிட்டு கார்த்திகை குமரன் மற்றும் வள்ளல் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து உணவு செரிமானம் ஏற்படவும், அன்னதோஷம் விலகவும் மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு விசேஷ வழிபாடும் முத்தான மூன்று ஹோமங்களாக நடைபெற உள்ளது. தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. ராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

English summary
With the blessings our beloved Guruji Yagnasri Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal, we are conducting Three homam on 08.10.2020s Saturday at Sri Dhanvantri arokya peedam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X