வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்த்திருவிழா - செப்.8ல் உள்ளூர் விடுமுறை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி, வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு
நாகை: வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி, வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
வரும் 8ஆம் தேதியன்று ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. வேளாங்கண்ணி மாதா திருவிழாவையொட்டி வரும் 8ஆம் தேதியன்று நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனி நடைபெறுவது வழக்கம். நேற்று பேராலயச் சிறிய தேர்பவனி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றனர். அதனால், போக்குவரத்து நெரிசல் இல்லாமலும், பயணிகள் அதிகமாக வரும் வசதிக்காகவும் தாம்பரம்-வேளாங்கண்ணி இடையிலான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி மாதா திருவிழாவையொட்டி வரும் 8ஆம் தேதியன்று நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்குப் பதிலாக, செப்டம்பர் 13ஆம் தேதியன்று வேலை நாளாகக் கொள்ளப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.